districts

img

தஞ்சை அய்யன்குளத்திற்கு ஒன்றிய அரசின் கலாச்சார விருது

தஞ்சாவூர், ஆக.27 -

       தஞ்சாவூர் மாநகராட்சியில் பொலி வுறு நகரத் திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட அய்யன்குளம், ஒன்றிய அரசின் கலாச் சாரப் பிரிவின்கீழ் விருதுக்காக தேர்வு  செய்யப்பட்டுள்ளது.

      தஞ்சாவூரை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சிக்காலத்தின் போது மேல வீதியில், 7,630 சதுர மீட்டர் பரப்பள வில் அய்யன்குளம் உருவாக்கப்பட் டது. இக்குளத்திற்கு பெரியகோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான நீர்வழிப் பாதையும் அமைக்கப்பட்டது.

     இந்நிலையில், தஞ்சாவூர் மாநக ராட்சியின் பொலிவுறு நகரத் திட்டத்தில்  ரூ.5.12 கோடி மதிப்பில் அய்யன்குளம் சீரமைக்கப்பட்டது. குளத்தை சுற்றிலும் நடைபாதைகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. மேலும், குளத்தை  சுற்றியுள்ள நடைபாதை பக்கவாட்டு சுவற்றில் 64 வகையான ஆயக்கலை கள், ஐவகை நிலங்கள், 9 நவரத்தினங் கள், 16 வகையான செல்வங்களைக் குறிக்கும் வகையில் ஓவியங்கள் வரை யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர் பாதை கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவ டிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.  

     இந்நிலையில் ‘பொலிவுறு நகரம்’ விருதுக்கான போட்டி, ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், ‘சுற்றுச்சூழல், கலாச் சாரம், பொருளாதாரம், ஆளுமை’ என்ற தலைப்புகளில், 80 பொலிவுறு நக ரங்களில் இருந்து 845 பரிந்துரைகளை பெற்றன.

    இதில் கலாச்சாரப் பிரிவில், 39 நகரில் இருந்து 67 பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டன. பின்னர், கடந்த ஜனவரி மாதம் 12 நகரங்களும், பிப்ரவரி மாதம் 6 நகரங்களும் தேர்வு  செய்யப்பட்டன. இறுதியாக கலாச்சா ரப் பிரிவுகளில் மூன்று நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியா னது.

    இதில், பாரம்பரியக் கட்டமைப்பை  புதுப்பித்தல் மற்றும் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி பாரம்பரிய சுற்று லாவை மேம்படுத்துதல் பணிக்காக அகமதாபாத் நகரமும், ஹெரிடேஜ் வாக்  திட்டத்தின் கீழ் சதர்மன்சில் வளாகத் திற்கு அருகில் உள்ள பாரம்பரிய கட்டி டங்களை மீட்டெடுத்தலுக்காக போபால் நகரமும், குளங்கள் பாது காப்பு மற்றும் கலாச்சாரத்தை பேணி  காத்தல் பிரிவில் தஞ்சாவூர் அய்யன் குளமும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.  

     இதற்கான விருதை 2023 செப்.27 அன்று, மத்தியப் பிரதேசத்தின் இந்தூ ரில் குடியரசுத் தலைவர் வழங்க உள்ள தாக, தஞ்சாவூர் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.