பெரம்பலூர், ஆக.5 -
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக ஆக.9 அன்று தலைநகர் சென்னை யில் மத்திய-மாநில தொழிற்சங்கங்களான எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஹெச்எம்எஸ், ஐஎன்டியுசி, எஸ்டியு சார்பில் பெருந்திரள் அமர்வு நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் ஆக.5, 6 ஆகிய இரண்டு நாட்கள் தொழிற் சங்க கூட்டமைப்பினர் மக்கள் சந்திப்பு தெரு முனை பிரச்சாரம் தொடங்கினர்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலை யத்தில் துவங்கிய பிரச்சாரத்தில் மாவட்டச் செயலாளர்கள் எல்பிஎப் ஆர்.ரெங்கசாமி, சிஐடியு எஸ்.அகஸ்டின், ஏஐடியுசி சி. சண்முகம், ஹெச்எம்எஸ் அ.சின்னசாமி, எஸ்டியு எஸ்.மாலிக்பாட்ஷா ஆகியோர் தலைமை வகித்தனர்.
மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் சட்டத் தொ குப்புகள் நான்கையும் கைவிட வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறை வேற்ற வேண்டும். தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்தப் பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற் கான நிதியை அதிகப்படுத்தி நகரங்களுக் கும் விரிவுபடுத்த வேண்டும்.
அரசுத் துறைகளில் காண்ட்ராக்ட் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு மற்றும் இதர ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத்தையும் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் பிரச்சாரத்தில் வலியுறுத்தப் பட்டன.