districts

பாதாளச் சாக்கடை பலிகளை தடுப்பது குறித்த கலந்தாய்வு

திருச்சிராப்பள்ளி, மே 31-

   திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலக கூட்ட ரங்கில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா  தலைமை யில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் பாதாளச் சாக்கடை களை சுத்தம் செய்யும் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர், 74 வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், புதுக்கோட்டை நகராட்சி ஆணையர், பேரூராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். 

;