புதுக்கோட்டை, ஆக.26 -
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை அடுத்த அண்டனூரில் டாக்டர் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சமுதாய வளைகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாம் மற்றும் சமுதாய வளைகாப்பு விழாவிற்கு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமை வகித்தார்.
அறந்தாங்கி துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.நமச்சிவாயம், வட்டார மருத்துவ அலுவலர் மரு.மணிமாறன், ஒன்றியக்குழுத் தலைவர் கார்த்திக், மாவட்டக் கவுன்சிலர் ஸ்டாலின் நாராயணசாமி, திமுக ஒன்றியச் செயலாளர் பரமசிவம், ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வுகளில் 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களும், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பொதுமக்களும் பங்கேற்றனர்.