நாகப்பட்டினம், பிப்.15- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் கீழையூர் ஒன்றி யம் வேப்பஞ்சேரி ஊராட்சியில் 450 குடும்பங்கள் உள்ளன. இதில் படுகை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகளில் அதே ஊரை சேர்ந்த ஒன்பது பேருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் சுமதி /காளியப்பன், முருகேஸ்வரி /குமரவேல், மேல தண்ணிலபாடியைச் சேர்ந்த கஜேந்திரன் /சாமிநாதன், ராஜலட்சுமி/மேகநாதன், முத்து லட்சுமி/முத்துசாமி, வேப்பஞ்சேரி யை சேர்ந்த தேனம்மாள்/முருகை யன், தேவராஜ்/புருஷோத்தமன், கண்ணம்மாள்/குப்பு, பிரேமா ஆகிய ஒன்பது பேருக்கும் வீடு கட்டித் தரு வதாக அதே பகுதியில் புலவனூர் சாலை சேவை மையம் இருக்கும் இடத்தில் இடம் கண்டறியப்பட்டு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு பேஸ்ட்டம் வரை கட்டு மானப் பணி நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் வீடுகள் கட்டித் தருவதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அப்படியே விட்டு விட்டு வீட்டிற்கான தொகையை மட்டும் ஒப்பந்தக்காரர் எடுத்துக்கொண்ட தாகத் தெரிகிறது. கடந்த ஏழு ஆண்டு களாக இந்த வீடுகள் கிடைக்குமென நம்பி ஏற்கனவே குடியிருந்த கூரை வீட்டையும் சரிவர பராமரிக்காமல் விட்டுவிட்டனர். தற்போது இவர்கள் மழையிலும், தண்ணீரிலும் அவதிப் பட்டு வருகின்றனர். அரசு சார்பில் கான்கிரீட் வீடு கட்டித் தருவார்கள் என்ற நம்பிக்கையில் குடியிருந்த வீட்டையும் பராமரிக்காமல் விட்டு விட்டனர்.
அடர்ந்த கருவேலங்காட்டிற்குள் முட்செடிகளுக்கு மத்தியில் குட்டிச் சுவர்களாக வீடுகள் காட்சியளிக் கின்றன வீடுகள் கால்நடைகளுக் கான மேய்ச்சல் பகுதியாகவும், கழிவுகளைக் கொட்டுவதற்கான இட மாகவும் மாறிவிட்டது. வீடுகளைக் கட்டுவதற்காக ஒப்பந்தக்காரர் ஒவ்வொருரிடமும் ரூ. 50 ஆயிரம் கொடுங்கள் எனக் கேட் டுள்ளார். அரசு சார்பில் கொடுக் கப்பட்ட தொகையயும் எடுத்துக் கொண்டு மக்களிடம் ஒப்பந்தக்காரர் பணம் கேட்டு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. வீடுகளின்றி தவித்து வரும் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். இதே ஒப் பந்தக்காரர் மயானக் கொட்டகை கட்டித் தருவதாகக் கூறி பணிளை தொடங்கி நான்கு தூண்களோடு நிறுத்தி விட்டார். இதையறிந்த கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி அப்பகுதியில் ஆய்வு மேற் கொண்டார். தொடக்க நிலையி லேயே நிற்கும் வீடுகளைப் பார்வை யிட்டார். அரைகுறையாக நிற்கும் மயானக் கொட்டகையையும் பார் வையிட்டார். வீடுகளின்றி தவித்து வரும் மக்கள் நாகை மாலியிடம் தங்க ளுடைய மனக்குமுறலை வெளிப் படுத்தினர். மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து பிரச்சனை குறித்துப் பேசி உடனடி யாக தீர்வு மேற்கொள்ளப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தர அனைத்துக்கட்ட முயற்சி களும் மேற்கொள்ளப்படும் என்று பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதிய ளித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.முத்தையன், சண்முகம், ஒன்றியக் கவுன்சிலர் லென்ஸ் கையா சிவபாதம் ஆகியோர் வந்தி ருந்தனர்.