புதுக்கோட்டை, செப்.5 - சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வடநாட்டிலும் நல்ல உரையாடலைத் தொடங்கி வைத்து இருக்கிறார் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா. புதுக்கோட்டையில் செவ்வாய்க் கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்த தாவது: சனாதன எதிர்ப்பில் புதிதாக எந்தக் குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்த முயற்சிக்கவில்லை. இப்போது சர்ச்சை யாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்திருத்தக் கருத்துகள் ஏறத்தாழ 100 ஆண்டு களாக இந்த மண்ணில் பேசிக் கொண்டி ருப்பதுதான். இது இந்தியா கூட்டணி யில் எதிர்ப்பு வந்திருப்பதாகக் கொள்ள முடியாது. தென் மாநிலங்களில் நீண்ட காலமாக நாம் பேசியது இப்போது வடமாநிலங்களில் உரையாடலாகி வரு கிறது. இது நல்லதுதானே. விமர்சனங்கள்தான் உரையாடலா கும்; உரையாடல்தான் நல்ல சிந்தனை யைத் தரும். அந்த வகையில் வடமாநி லங்களில் உதயநிதி உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறார். இந்தியா என்ற பெயரை பாரத் என்று மாற்றப் போவதாக செய்திகள் வரு கின்றன. தங்களுக்குப் பிடித்ததை சர்வாதிகாரமாக செய்ய முயற்சிக் கிறார்கள். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவது இயல்புதான். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முன்னால், ஒரே நாடு ஒரே சுடுகாட்டைக் கொண்டு வரட்டும். புதுக்கோட்டையில் சிந்தெட்டிக் விளையாட்டுத் தளம் அமைப்பதற்காக ஒன்றிய அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை விளையாட்டரங்கம் அமைந்துள்ள பகுதி காட்டுப் புதுக்குளம் என்ற பழைய நீர்நிலைப் பகுதி. பெருமழை வந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுப்பணித் துறையின ருடன் பேசி, பாதிப்பில்லாத வகையில் விளையாட்டரங்கப் பகுதியை போது மான அளவுக்கு உயர்த்தி, வடிகால் வசதிகளையும் செய்து முடித்த பிறகு, சிந்தெட்டிக் விளையாட்டரங்கம் அமைக்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் தடகள சங்கம் முறைப்படி அமைத்து, பதிவு செய்யப்பட்டுள்ளது. செப். 14,15, 16,17 தேதிகளில் நாமக்கல்லில் நடை பெறவுள்ள மாநில தடகளப் போட்டி களில் பங்கேற்கச் செய்வதற்காக புதுக் கோட்டை வீரர்களைத் தேர்வு செய்யும் போட்டிகள் செப். 8,9 தேதிகளில் நடை பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.