districts

யூடிஎப் அரசின் உத்தரவை ரத்து செய்து ஆனவிலாசம் சிக்கலுக்கு தீர்வு கண்ட எல்.டி.எப் அரசுக்கு சிபிஐ(எம்) பாராட்டு

செருதொணி, பிப்.4 - ஆனவிலாசம் கிராமத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து காங்கிரஸ் அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நிவாரணம் அளித்த எல்.டி.எஃப் அரசுக்கு பாராட்டு தெரிவிப் பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் சி.வி. வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:  உயர் நீதிமன்ற உத்தரவு என்ற போர்வையில் மூணாறில் கட்டுமானங்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், ஆனவிலாசம் கிராமமும் இடம் பெற்றுள்ளது. கடந்த 2016 ஏப்ரல்  22 ஆம் தேதி உம்மன்சாண்டி முதல்வராகவும், அடூர் பிரகாஷ் வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்தபோது, ஆனவிலாசம் உள்ளிட்ட 8 கிராமங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாவை பயன்படுத்தி மூணாறில் மேற்கொள்ளும் பெரிய அளவிலான கட்டுமானங்களை முறைப்படுத்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்த ரவு என்ற போர்வையில், ஆனவிலாசம் மக்களின் வாழ்க்கையை சிக்கலுக்கு உள்ளாக்கினர். மூணாறில் இருந்து 90 கி.மீ., தொலைவில் உள்ள சுற்றுலா வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத, விவசாயிகள், தொழிலாளர்கள் மட்டுமே வசிக்கும் ஆனவிலாசத்தை சேர்ப்பது அறிவியலற்றது, நியாயமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போதே சுட்டிக் காட்டியது. இதன் ஒரு பகுதியில் உள்ள ஒட்டுமொத்த மக்களையும், அவர்களின் வாழ்க்கைச் சூழலையும் சிக்கலுக்கு உள்ளாக்கிய காங்கிரஸின் தவறான முடிவை, துணிச்சல்மிக்க பினராயி அரசு மாற்றி எழுதியது.

ஆனவிலாசத்தின் மீதான  தேவையற்ற கட்டுப்பாடுகளை திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், எல்டிஎப்பும் அரசுக்கு  கோரிக்கை விடுத்தன. இடுக்கி மக்களை சிக்கலில் தள்ளியது அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் அமைச்சரவைகளாகும்.  யூடிஎப் அரசு கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்களையும், ஆணைகளையும் ஒவ்வொன் றாக மாற்றி, பினராயி அரசு மக்களுக்கு ஆறுதல் அளித்து, காத்து வருவதை ஆனவிலாசம் வெளிப்படுத்துகிறது. 12 கி.மீ தூரத்தை அதிர்வு தாங்கல் மண்டலமாக மாற்றும் உம்மன்சாண்டி அரசின் உத்தரவையும் எல்.டி.எப் அரசு மாற்றியது. காகித மதிப்புகூட இல்லாத வகையில் 16 நிபந்தனைகள் கொண்ட பட்டாக்களை உம்மன் சாண்டி  அரசு வழங்கியது. ஒரு ஏக்கருக்கு மட்டும் பட்டா வழங்க வேண்டும். பதிவு செய்து  வழங்கப்பட்ட நிலத்தை கைமாற்றம் செய்யக் கூடாது. ஒரு லட் சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனை களை கைவிட்டு இரட்டையாரின் பத்து சென்ட் பகுதி உட்பட நிபந்த னையற்ற பட்டாக்களை எல்.டி.எப் அரசு  வழங்கியுள்ளது. காங்கிரஸால் அறிமுகப்படுத்தப்பட்ட காட்கில்-கஸ்தூரி ரங்கன் உள்ளிட்ட அனைத்து சட்டச் சிக்கல்களையும் அவிழ்த்து, இடுக்கி மக்களை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைத்துள்ளது பினராயி அரசு. இவ்வாறு சி.வி.வர்கீஸ் தெரிவித்துள்ளார்.