districts

சயனைடு கலந்த மதுபானம் குடித்து இருவர் பலி சகோதரர்களால் கொலை செய்யப்பட்டது அம்பலம்

மயிலாடுதுறை, ஜூன் 14-

     மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா  பெரம்பூர் காவல்சரகத்திற்கு உட்பட்ட மங்கநல்லூரை அடுத்த தத்தங்குடி கிராமத்தில் பழனிகுருநாதன் மற்றும் பூராசாமி ஆகிய இரண்டு பேர் டாஸ்மாக் மது பானம் அருந்தியதால் செவ்வாயன்று உயிரிழந்த தாக உறவினர்கள் குற்றம் சாட்டிய நிலையில், உயி ரிழந்த இருவரின் உடல்கள் பிரேத பரிசோத னைக்காக திருவாரூர் கொண்டு செல்லப்பட்டது.  

    மேலும், அவர்கள் இறந்து கிடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட டாஸ்மாக் மது பாட்டில்களை தடய அறிவியல் மருத்துவ நிபுணர் குழு சோதனை செய்தது. இதில் மது பாட்டிலில் சயனைடு விஷம் கலக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரி வித்து இருந்தார். ஏற்கனவே சந்தேக மரணம் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

     இதனிடையே, மாவட்ட ஆட்சியர் தவறான தகவலை பதிவிடுவதாகவும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி மங்கைநல்லூர் பகுதியில் பழனிகுருநாதன் வீட்டின் அருகே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட ஆட்சியர் பொய்யான செய்தியை பரப்புவதாக கண்டன முழக்கமிட்டனர். இதனால் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.  

   போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கோட்டாட்சி யர் யுரேகா, டிஎஸ்பி சஞ்சீவ்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, போராட்டம் நீடித்த நிலையில், இருவரது குடும்பத்துக்கும் பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் சார்பில் அவரது சொந்த நிதியில் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.  

   இதைத்தொடர்ந்து, இருவரது உடல்களும் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு, உறவினர்கள் மரி யாதை செலுத்திய பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.  

சொத்து பிரச்சனை

    பழனிகுருநாதன் குடும்பத்தினரிடையே ஏற்கெனவே சொத்து பிரச்சனை இருந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் பழனி குருநாதனின் அண்ணன்கள் மனோகர், பாஸ்கர் ஆகிய இரு வரை காவல்துறையினர் மயிலாடுதுறை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி னர்.

   இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இதுகுறித்து, விளக்கம் அளித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அதில், தடவியல் துறை துணை இயக்கு நரின் பரிசோதனை அறிக்கையின்படி உயிரி ழந்தவர்களின் ரத்தத்தில் சயனைடு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

   இதன் பின்னணியில் பழனிகுருநாதனின் சகோதரர்கள் (முதல் தாரத்தின் மகன்கள்) பாஸ்கர், மனோகர் ஆகிய இருவரும் மதுவில் சயனைடு கலந்துகொடுத்து கொலை செய்தது தெரியவந்தது.  

   மேலும், உடற்கூராய்வு அறிக்கையில் சய னைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்து மேல் விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.