திருச்சிராப்பள்ளி, மே 15 - திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் நவலூர் குட்டப்பட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்டு விழா, கலை விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவினை குத்துவிளக்கேற்றி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். கபடி போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மேயர் அன்பழகன், வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, கல்லூரி முதல்வர் மலர்விழி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.