கும்பகோணம், ஏப்.3- மக்களுக்கான திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு செயல் படுத்துவதில்லை என கும்பகோ ணத்தில் திருச்சி சிவா எம்.பி., கூறினார். இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக காங்கி ரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறி ஞர் ஆர்.சுதா போட்டியிடுகிறார். அவருக்கு கை சின்னத்தில் வாக்கு கேட்டு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினரும், திமுக தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாள ருமான கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். கும்பகோ ணம் சட்டமன்ற உறுப்பினர் சாக் கோட்டை அன்பழகன், அரசு தலைமை கொறடாவும், திரு விடைமருதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கோவி.செழி யன், தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர். லோக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் பரப்புரையில் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தஞ்சை மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி, விசிக மாநகர மாவட்டச் செயலாளர் சா.கோ.ராஜ்குமார், திராவிட கழக மாவட்டத் தலை வர் நிம்மதி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் குடந்தை ஆசாத் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர். திராவிட முன்னேற்ற கழக கொள்கை பரப்புச் செயலாளரும், கழக மாநிலங்களவை குழு தலைவருமான திருச்சி என்.சிவா சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகை யில், “தேர்தல் ஜனநாயக திரு விழா ஏப்.19 அன்று நடைபெறு கிறது. அதில் மதச்சார்பற்ற அரசு உருவாக்கப்பட வேண்டும். இந்தி யாவில் எல்லா மதமும் ஒன்று தான். ஆனால் அதற்கு ஆபத்து வந்திருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்துவதில்லை. அது குறித்து நாங்கள் நாடாளு மன்றத்தில் பேசினால் ஒலிபெருக் கியை நிறுத்துவதும், நாங்கள் விவாதம் செய்யும் ஒளி காட்சி களை வெளியிடாமலும், எங்கள் குரலுக்கு மரியாதை கொடுக்கா மலும் இருக்கின்றனர். மத்தியில் ஆளுகிற பாஜக அரசு, விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அந்தச் சட்டத்தின் நகல்களை நாங்கள் நாடாளுமன்றத்திலேயே கிழித்தெறிந்தோம். கடந்த பத்து ஆண்டுகளில் மோடி அரசு 108 முறை பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தி உள்ளது. ரூ.60-க்கு விற்ற பெட்ரோல்-டீசல் 100 ரூபாய்க்கும், சமையல் எரிவாயு விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உயர்ந்து இருக்கிறது. இதன்மூலம் ரூ.7.5 லட்சம் கோடி ஒன்றிய அர சுக்கு கிடைத்தது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக் கைகளால், நாட்டில் ஏழைகள் பிச்சைக்காரர்களாக மாறுகிறார் கள்; பணக்காரர்கள் செல்வந்தர் களாக மாறுகிறார்கள். ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டிய தேர்தலில்கூட, தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய சட்டம் கொண்டு வருகிறார் கள். பயங்கரவாத தடுப்புச் சட்டம் என்ற பெயரில், என்ஐஏ அமைப் பின் மூலம் தனி ஒருவரை பயங்கர வாதியாக தீர்மானித்து, அவர் களுக்கு தண்டனை வழங்கு கிறார்கள்.
அதேபோல முஸ்லிம் களுக்கு எதிராக முத்தலாக் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. நாங்கள் விதவைகளுக்கு மறு வாழ்வு சட்டம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத் தில் கூறிய போது, அதை காதில் வாங்காமல் இருந்தது பாஜக அரசு. தலையெழுத்தை மாற்ற... அதேபோல குடியுரிமைச் சட்டத்தில் மூன்று திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். அதில் முஸ்லீம்களை சேர்த்து கொள்ள வேண்டும், இலங்கையில் இருப்ப வர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விவாதித்தோம். இந்த விவாதத்திற்கு 99 வாக்கு கள் கிடைத்தன; ஆனால் 124 வாக்குகள் பெற்று குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்தினர். குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக 13 வாக்குகள் செலுத்தி, அதற்கு துணை போ னது. இந்த குடியுரிமைச் சட்டத் திற்கு ஆதரவாக ஒரு வாக்கு கூடுதலாக செலுத்தி, அமல்படுத் தியது தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள்தான். எனவே நாட்டின் தலையெ ழுத்தை மாற்ற மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் வழக்கறிஞர் சுதாவிற்கு கைச் சின்னத்தில் வாக்களி யுங்கள்” என்றார். இதில் மாவட்டச் செயலர் கல்யாணசுந்தரம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச் செல்வன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இதேபோன்று அய்யம் பேட்டை யிலும், திருச்சி சிவா எம்.பி., தேர்தல் பிரச்சாரம் செய்தார்.