இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை.வைகோவை ஆதரித்து, சிஐடியு தரைக்கடை சங்கத்தின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது. சிஐடியு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். பின்னர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்குச் சேகரித்தனர்.