districts

திருச்சி காவேரி மருத்துவமனையில் மூளைக்கட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, ஜூன் 9- ஒவ்வொரு வருடமும் ஜூன் 8-ஆம் தேதி மூளைக் கட்டிகள் குறித்த விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதை யொட்டி திருச்சி காவேரி மருத்துவமனை யில் மூளைக்கட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  மருத்துவமனை செயல் இயக்குநர் டாக்டர் செங்குட்டுவன் தலைமை வகித்தார். காவேரி மருத்துவமனை மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ஜோஸ் ஜஸ்பர் நிருபரிடம் கூறியதாவது: ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவ ருக்கு மூளையில் கட்டி இருப்பதாகத் தெரிந்தாலே அவரின் வாழ்க்கையே முடிந்து விட்டதாகக் கருதப்பட்டது. ஆனால், இப்போ தோ விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக மூளைக் கட்டிகள் இருந்தாலும் அதற்கான முறையான சிகிச்சைகள் இருக்கிறது. புதிதாக ஏற்படக்கூடிய அதிகாலை தலைவலி, கை, கால்கள் பலவீனம், பார்வைக் கோளாறு, பேச்சில் தடுமாற்றம், முழுங்குவதில் சிரமம் இவை ஒருவருக்குக் காணப்பட்டால் கட்டாயம் அவர் உடனே ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபு ணரை ஆலோசிக்க வேண்டும். இதே பிரச்ச னைகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால் தாமத மின்றி உடனே சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சிக ளுடன் கூடிய மைக்ராஸ்கோப் மற்றும் ஜி.பி.எஸ் மூலம் அறிகுறிகளை ஆரம்ப நிலை யிலே கண்டறிவதன் மூலம் பின்விளைவுக ளைப் பெரும்பாலும் குறைக்க முடிகிறது. மூளையில் வரக்கூடிய கட்டிகளில் 60லிருந்து 70 சதவீதம் சாதாரணக் கட்டிகள் தான். புற்றுநோய் கட்டிகள் இல்லை. அப்ப டியே புற்றுநோய் கட்டிகளாக இருந்தாலும் நவீன தொழில் நுட்பத்தின் காரணமாக கட்டிக ளின் மூலக்கூறுகள், டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ குறித்தும் அறிந்து கொள்ள முடி வதால் அதற்கேற்ப அந்தந்தக் கட்டிகளுக்கு  முறையான சிகிச்சைகளை அளிக்க முடிகிறது. ‘‘நம்பிக்கை இழக்காதீர்கள், மூளைக் கட்டிகளுக்கும் முறையான சிகிச்சை உண்டு’’ என்பதே இந்த நாளின் மிக முக்கி யமான செய்தி என்றார். பேட்டியின் போது மருத்துவ நிர்வாகி ராஜேஸ், மூளை மற்றும் தண்டுவட சிகிச்சை டாக்டர்கள் மதுசூதன், ஸ்ரீஹரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.