திருச்சிராப்பள்ளி, ஏப்.15 - சேலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏப்.13,14 தேதிகளில் அகில இந்திய அள விலான சாஃப்ட் பால் போட்டி நடைபெற்றது. கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என 4 பிரிவு களாக நடந்த போட்டியில், இந்திய அளவி லான அணிகள் பங்கேற்றன. நான்கு கட்டங்களாக நடத்தப்பட்ட போட்டியில் 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் திருச்சி எஸ்.பி.ஐ.ஓ மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிற மாணவிகள் ஈஸ்வரி மற்றும் ஜெனிபர், தமிழ்நாடு சார்பில் தென்னிந்திய அணியில் பங்கேற்று, போட்டி யில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு இந்திய சாஃப்ட் பால் சங்க சேர்மன் பிரவின் அனனோகர், பொதுச் செய லாளர் எல்.ஆர்.மௌரியா, தமிழ்நாடு சாஃப்ட்பால் சங்க தலைவர் ஆர்.பாலமுரு கன், செயலாளர் எஸ்.மாதவன், திருச்சி சாஃப்ட்பால் சங்க தலைவர் டி.ஜெ.வெங்க டேசன், துணைத் தலைவர்கள் ஐ.இளங்கோ வன், ஏ.சத்தியமூர்த்தி, எஸ்.ரகுபதி, செய லாளர் ஆர்.சரவணன், பயிற்சியாளர் எம்.சூரியா ஆகியோர் பரிசளித்து பாராட்டினர். தங்கப் பதக்கம் வென்ற மாணவிகள், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.