districts

img

கல்லூரி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.13- திருச்சி துவாக்குடி அரசு கலை மற்றும்  அறிவியல் கல்லூரி அருகில் செயல்பட்டு  வரும் டாஸ்மாக் கடையால் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரிக்கு செல்  லும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு  வருகின்றனர். எனவே, டாஸ்மாக் கடை யை அகற்றக் கோரி இந்திய மாணவர் சங்  கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் மார்க்சியா தலைமை  வகித்தார். மாநில துணை செயலாளர் ஜி.கே.மோகன், திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் சூரியா, சட்டக்கல்லூரி நிர்வாகி கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.