districts

img

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு

தஞ்சாவூர், செப்.10-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், திருச்சி கோட்ட ரயில்வே  மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.  திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அன்பழகன் சனிக்கிழமை காலை 7 மணிக்கு, திருச்சி சந்திப்பிலிருந்து சிறப்பு ஆய்வு ரயில் பெட்டியில் புறப்பட்டு, திருவா ரூர், திருத்துறைப்பூண்டி, அகஸ்தியம் பள்ளி, அதிராம்பட்டினம் ரயில் நிலை யங்களை ஆய்வு செய்துவிட்டு, மதியம் 3  மணிக்கு பட்டுக்கோட்டை ரயில் நிலை யத்திற்கு வருகை தந்தார். திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருடன் முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டாக்டர் செந்தில்குமார், முதுநிலை கோட்ட பாது காப்பு அலுவலர் சரவணன் மற்றும் திருச்சி  கோட்ட  ரயில்வே அதிகாரிகள் வந்திருந்தனர்.  பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில், பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் கோட்ட ரயில்வே மேலாளருக்கு பொன்னாடை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வரவேற்றனர். கோட்ட ரயில்வே  மேலாளர், பட்டுக்கோட்டை ரயில் நிலையத் தில் சிக்னல் பிரிவு, எலக்ட்ரிக்கல் பிரிவு, பாது காப்பு சாதனங்கள், ரயில் பாதைகள் மற்றும் தீயணைப்பு சாதனங்கள் முறையாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்தார். பின்பு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பய ணிகள் நலச் சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை விதை அறக்கட்டளை சார்பில், மரக்கன்று கள் நடும் திட்டத்தை கோட்ட ரயில்வே மேலா ளர் துவங்கி வைத்தார். அவரிடம், பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத் தின் அளித்த அம்மனுவில், பட்டுக்கோட்டை  ரயில் நிலையத்தில் உள்ள பயணச் சீட்டு  முன்பதிவு மையத்தை மீண்டும்  ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்க வேண்டும்.  கம்பன் விரைவு ரயிலுக்கு பதிலாக தாம்பரம் - ராமேஸ்வரம் தினசரி இரவுநேர விரைவு ரயில்,  சோழன் அதிவிரைவு ரயிலுக்கு மயிலாடு துறையில் இணைப்பு ரயிலாக காரைக்குடி  -மயிலாடுதுறை ரயிலை இயக்க வேண்டும். திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக் குடி ரயில் தடத்தில் இயங்கி வரும் பயணிகள்  ரயிலை ஞாயிற்றுக்கிழமையும் இயக்க வேண்டும். அதிராம்பட்டினம் ரயில் நிலையத் தில் தாம்பரம்- செங்கோட்டை விரைவு ரயில்  நின்று செல்ல வேண்டும்” எனக் கூறப்பட்டு உள்ளது.  பின்னர் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர், “பட்டுக்கோட்டை ரயில் நிலையத் தில் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் முன்பதிவு மையம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.