திருச்சிராப்பள்ளி, மார்ச் 10- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஒன்றியக்குழு சார்பில் சர்வதேச பெண்கள் தின கருத்தரங்கம் மணப்பாறையில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாதர் சங்க வட்டச் செயலாளர்கள் சரஸ்வதி, ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். வட்டப் பொருளாளர் நஸ்ரின் பானு வரவேற்றார். கருத்தரங்கில் “இன்றைய சூழலில் நமது கடமைகள்” என்ற தலைப்பில் டாக்டர் சோபனா ஆனந்த், “வெறுப்பு அரசியலை வேரறுப்போம்” என்ற தலைப்பில் மாதர் சங்க திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் கோமதி, “பெண்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பேசினர். முன்னதாக மாதர் சங்க கொடியை மாநிலச் செயலாளர் தமிழ்ச்செல்வி ஏற்றினார். சிறுமியர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. மருங்காபுரி வட்டச் செயலாளர் கவிதா நன்றி கூறினார். புதுச்சேரியில் கஞ்சா கும்பலால் பாலியல் வல்லுறவு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.