திருச்சிராப்பள்ளி, ஆக.28- திருச்சி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கம் மற்றும் தேசியக் கல்லூரி சார்பில் திருச்சி மாவட்ட அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்-2023 போட்டிகள் ஆக.26, 27 தேதிகளில் தேசியக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் குழந்தைகள் பிரிவு மற்றும் சப் ஜூனியர், கேடட் ஜூனியர், சீனியர் என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள், மாநில அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கத்தின் செயலாளர் கணேசன் மற்றும் பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.