திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவில், தங்கப்பதக்கம் பெற்ற 33 மாணவ - மாணவிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பட்டங்களை வழங்கினார். விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம், பதிவாளர் முனைவர் கணேசன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.