திருச்சி - துவாக்குடி சுங்கச் சாவடியை மூட வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
திருச்சிராப்பள்ளி, ஆக.31- திருச்சிராப்பள்ளி - துவாக்குடி சுங்கச் சாவடியை உடனடியாக மூட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: திருச்சிராப்பள்ளி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி அருகில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சுங்கச்சாவடி உள்ளிட்ட தமிழ கத்தின் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி களில் உபயோகிப்பாளர் கட்டணத்தை உயர்த்துவதை வாபஸ் பெற வேண்டும். கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள திருச்சி ராப்பள்ளி - துவாக்குடி சுங்கச்சாவடியைப் பொறுத்தவரை கடந்த 2006-ஆம் ஆண்டு நான்கு வழிச்சாலை அமைத்த போது திருச்சிராப்பள்ளி பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகுச் சாலை (அணுகு சாலை ) அமைக்காமல் நான்கு வழிச்சாலை விதிகளை மீறி சட்டத்திற்குப் புறம்பாக 14.5 கிலோமீட்டருக்கு சாலை அமைக்கப்பட்டது. அதன் விளைவாக கடந்த 16 ஆண்டுகளாக சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் மரணமடைந் துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நிரந்தர ஊனமடைந்துள்ளனர். தமிழகத்திலேயே அதிக விபத்து நடக்கும் சாலையாக இந்தச் சாலை மாறியுள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அணுகுசாலை அமைக்காத நிலையில் மனித உயிர் பலியாவதற்கு பொறுப்பேற்று சுங்கச்சாவடி வசூலை நிறுத்துவதோடு அதை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலரை புறக்கணிக்க ஜவாஹிருல்லா எம்எல்ஏ வேண்டுகோள்
பாபநாசம், ஆக.31- அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவ, மாணவிகளுக்குக் காலைச் சிற்றுண்டி வழங் கும் திட்டம் குறித்த தினமலரின் கீழ்த்தரமான செய்தி கடும் கண்டனத்துக்குரியது என பாப நாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திணைத்துணை நன்றிசெயி னும் பனைத் துணையாக் கொள்வர் பயன் தெரிவார்” என்கிறார் திருவள்ளுவர். ஒருவர் திணையளவு உதவிச் செய்திருந் தாலும், அந்த உதவியின் பயன் அறிந்த வர்கள், அந்த உதவியைப் பனையளவுக்கு உயர்த்திப் பார்ப்பார்கள். ஆனால் தின மலரிடம் இந்த உயரிய பண்பாடோ, கோட் பாடோ இல்லை என்பதை அம்பலப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து வெளி யிட்டுள்ள அநாகரீகச் செய்தி அம்பலப் படுத்தியுள்ளது. தமிழகத்தில் கல்விப் புரட்சியை நிகழ்த்த வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு கடும் களப் பணியாற்றி வரும் தமிழ்நாடு முதல மைச்சரின் முயற்சியை எதிர்த்து வன்மத் தோடு எழுதியிருக்கிறது தினமலர். தமிழகத்தின் மற்றைய ஏடுகள் அனைத்தும், இந்தத் திட்டத்தைப் பாராட்டி எழுதிக் குவித்துள்ளன. காலை உணவை உண்டு, உடல் திறனுடன் கல்வியைக் கற்கும் மாணவர்களின் புன்னகை பூக்கும் முகங்கள் தினமலருக்கு மட்டும் வெறுப்பாகத் தெரி கிறது. தமிழ்நாட்டிற்கு ஒவ்வாத கருத்து களைப் பரப்பும் தினமலரைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனை செவிலியர் தற்கொலை: உறவினர்கள் போராட்டம்
கும்பகோணம் ஆகஸ்ட் 31 தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலி யர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் உள்ளதாகக் கூறி அவரது உறவினர்கள் தனியார் மருத்து வமனையை முற்றுகையிட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த மண லூர் கிராமம் திருமாந்துறை தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் இவரது மகள் வைஷ்ணவி (22) இவர் செவிலியர் படித்து முடித்து கும்பகோணத் தில் பாஜக பிரமுகருக்குச் சொந்தமான தனியார் மருத்துவ மனையிலே தங்கி செவிலியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வைஷ்ணவி தாம் தங்கியிருந்த தங்கும் அறையிலே பினமாக தூக்கில் தொங்கினார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வைஷ்ணவி உறவி னர்கள் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு வைஷ்ணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனை முன்பு சாலை மறியல் ஈடுபட்டனர். இந்த நிலையில் வைஷ்ணவி தற்கொலைக்கு காரண மானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கும்ப கோணம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டனர். ஊர்வலமாகச் செல்ல முயன்ற 12 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வைஷ்ணவி மரணம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருவதாகவும் விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குரைஞர்கள் போராட்டம்
அரியலூர், ஆக.31- ஒன்றிய அரசைக் கண்டித்து அரியலூர் ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞர் சங்கத் தினர் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்ற வியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்க ளில் மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒன்றிய அரசைக் கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோ தாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலி யுறுத்தியும் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன் மற்றும் அரசு வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
வைக்கம் நூற்றாண்டு போட்டிகள்
அரியலூர், ஆக.31- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா நினைவுப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை கல்லூரியின் முதல்வர் ரமேஷ் தொடக்கி வைத்தார். பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி-வினா உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வரதராசன் பேட்டை மதர்ஞானாம்பாள் கல்லூரி, ஆண்டிமடம் செயின்ட் பீட்டர்ஸ் மற்றும் நேசனல் கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சிறார் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி
அறந்தாங்கி, ஆக 31- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் மற்றும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரி, அறந்தாங்கி ஐடியல் கல்வி குழுமம் இணைந்து நடத்திய சிறார் வன் கொடுமை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் தலைவர் முருகேசன் தலைமை வகித் தார். செயலாளர் சுப்பு முன்னிலை வகித்தார். பேரணியை ரோட்டரி மாவட்டச் செயலாளர் (சிறப்புத்திட்டம்) முரளி துவக்கி வைத்தார். பேரணியில் அறந்தாங்கி வட்டாட்சியர் பால கிருஷ்ணன், ரோட்டரி மாவட்டம் 3000- மண்டல ஒருங்கிணைப்பாளர் பீர்சேக், விருது கள் குழு இயக்குனர் கராத்தே கண்ணையன், துணை ஆளுனர் பழனிவேல், அறந்தை ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப் பட்டய தலைவர் தங்கதுரை, முன்னாள் தலைவர்கள் சேக் சுல்தான், புவனாசெந்தில்குமார், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் விழிப்பு ணர்வு உரையாற்றினர். பேரணியில் அறந்தைப் ப்ரண்ட்ஸ் ரோட்டரி கிளப்பின் நிர்வாகிகள் சரவணன், விஜயசுந்தர், கண்ணன், செந்தில்வேலன், லோகநாதன், விவேக்ராஜா, அறந்தை செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சாத்தனூர் ஊராட்சி மன்றத் தலைவரின் கார் கண்ணாடி உடைப்பு
மயிலாடுதுறை, ஆக.31 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் எடுத்துக்கட்டி சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுக வைச் சேர்ந்த பைலட். இவர் தனது வீட்டு வாசல் அருகே நிறுத்தியிருந்த பொலிரோ கார் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தி யுள்ளனர். கார் முன்புறமுள்ள கண்ணாடி மற்றும் பின்புறம் உள்ள கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன. மேலும் காரில் இருந்த சில பொருள்களும் திருடப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவர் பைலட் பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து தனக்கு அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் பைலட் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பொறை யார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு ஊழியர் சங்க பேரவை
திருவாரூர், ஆக.31- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவாரூர் வட்ட கிளை பேரவை பழைய பேருந்து நிலையம் அருகே தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. பேரவையில் தமிழ்நாடு அரசு உடனடியாக தேர்தல் வாக்குறு திகளை நிறைவேற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கிட வேண்டும். 4 லட்சத்திற்கும் மேலான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தனி யாருக்கு தாரை வார்ப்பதை கைவிட்டு, சத்துணவு திட்ட ஊழியர்கள் மூலம் செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்தப் பேரவை நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஆக.31- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் அருகே கீழக்கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்பனைக் குழு தனி அலுவலர் வித்யா தலைமை வகித்தார். விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரிய மாலினி முன்னிலை வகித்தார். ஏலத்தில் கும்பகோணம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிரா மங்களில் இருந்து 1836 விவசாயிகள் சராசரியாக 2182 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 வணி கர்கள் பங்கேற்று அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7132, குறைந்த பட்சம் ரூ.5500, சராசரி ரூ.6672 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தி யின் மதிப்பு சராசரியாக ரூ.1.45 கோடி.
கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டவர் கைது
பேராவூரணி, ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே காப்பர் வயர் திருட்டு வழக்கில் தேடப்பட்டவர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். பேராவூரணி பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின் மோட்டார் காப்பர் வயர்கள் திருடு போனது. இது தொடர்பாக கடந்த 25 அன்று வாகனச் சோதனையில் காப்பர் வயருடன் பிடிபட்ட செங்க மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரை காவல்துறை யினர் கைது செய்தனர். அவருடன் வந்த தங்கராசு என்பவர் தப்பி ஓடி விட்டார். இந்த நிலையில் செங்கமங்கலம் பகுதியை சேர்ந்த வீராச்சாமி (45) என்பவர் தான், காப்பர் வயர் திருடியதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாக சந்தேகித்த தங்கராசு மற்றும் சிலர், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு வெளியே குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்த வீரா சாமி கழுத்தில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வீராசாமி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பேராவூரணி காவல்துறையினர் தங்கராசுவை திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து, தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கி, ஆக- 31 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்ஐசி அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்ஐசி நிர்வாகம் ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தையை உடனடி யாக தொடங்க வேண்டும். எல்ஐசி வளர்ச்சிக்கேற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும். நிரப்பப்படாத காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். என்பி எஸ் திட்டப் பயனாளிகளுக்கு எல்ஐசி-யின் பங்க ளிப்பை 14 சதவீதமாக உயர்த்த வேண்டும், குடும்ப ஓய்வூதியத்தை முப்பது சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறந்தாங்கி எல்ஐசி அலுவலகம் முன்பு முதல் நிலை அதிகாரிகள் சங்கம், காப்பீட்டு களப் பணியாளர் சம்மே ளனம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின.
புதிதாக சாலை அமைக்கும் பணிகள்: எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தஞ்சாவூர், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கங்காதபுரம் ஊராட்சி பாலச்சேரிக்காடு - குண்டாமரைக்காடு சாலையை தார்ச்சா லையாக அமைத்து தரவேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் பரிந்துரையின் பேரில் பாலச்சேரிக்காடு - குண்டா மரைக்காடு இணைப்புச் சாலை தார்ச் சாலையாகவும், புதிய பாலம் கட்டவும் ரூ.68.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணியை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் வியாழனன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதேபோல், குருவிக்கரம்பை ஊராட்சி அரசரடி செல்வ விநாய கர் கோயில் - வி.எம்.டி பாலம்- மெய்யப்ப சுவாமி கோவில் இணைப்பு தார்ச்சாலை ரூ.59.07 லட்சம் மதிப்பீட்டில், முதலமைச்சர் கிராமச் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் தார்ச்சாலை அமைக்கும் பணியையும், அத னைத் தொடர்ந்து, நாடியம் ஊராட்சியில் காஞ்சிராங்கொல்லை சாலை ரூ.70.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கும் பணியையும் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.