districts

திருச்சி விரைவு செய்திகள்

அதிராம்பட்டினம் ஏஎப்சிசியின் மாபெரும் கிரிக்கெட் போட்டி

தஞ்சாவூர், மே 28-  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நண்பர்கள் கிரிக்கெட் கிளப் (ஏஎப்சிசி) சார்பில், 17 ஆம் ஆண்டு மாபெரும்  கிரிக்கெட் போட்டி அதிராம்பட்டினம் கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டியில் 24 அணிகள் சிறப்பாக விளையாடின. இறுதிப் போட்டியில், தஞ்சாவூர் பிவிஎம்சிசி அணியினரும், பட்டுக்கோட்டை ஆர்விஎம்சிசி அணியினரும் விளையாடினர். இந்த போட்டியில், தஞ்சாவூர் அணி தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று பரிசுக் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது.  போட்டியில், பட்டுக்கோட்டை காவல்துறை கண்கா ணிப்பாளர் செங்கமலக்கண்ணன், அதிராம்பட்டினம் காதர்முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது  அகமதுகபீர், கா.மு.ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஓய்வு பெற்ற  நல்லாசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் வெற்றி பெற்ற அணி களுக்கு பரிசுகளை வழங்கினர்.


கற்கருவித் தொழில்நுட்ப  பணிப் பட்டறை

தஞ்சாவூர், மே 28-   தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் மாணவர்களுக்கு, திறன் மேம் பாட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக, கற்கருவித் தொழில் நுட்ப  பணிப்பட்டறை மே 26, 27 28 ஆகிய 3 தினங்கள் நடைபெற் றன.  இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து தமிழ்ப்  பல்கலைக் கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பணிப் பட்டறை யைத் தொடங்கி வைத்தார். இதில், பஞ்சாப் மாநிலம் மொகாலி யில் உள்ள, இந்திய அறிவியல் கல்வி ஆய்வு நிறுவனத்தின்  கற்கருவித் தொழில்நுட்ப வல்லுனர்கள் முனைவர் பார்த் சௌ ஹான், விவேக் சிங், சென்னைப் பல்கலைக்கழக தொல்லி யல் துறை அகழாய்வு பொறுப்பாளர் ஜினுகோஷி, தமிழ்ப்  பல்கலைக்கழகப் பதிவாளர் க.சங்கர், சுவடிப்புல முதன்மை யர் த.கண்ணன், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லி யல் துறையின் தலைவர் கலந்து கொண்டனர்.


பகுத்தறிவு அரசு உதவிபெறும் பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா

 கும்பகோணம், மே 28 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சாக்கோட்டை யில் 1945 ஆம் ஆண்டு பெரியார் ஈ.வெ. ராமசாமியால் தொடங்கப்பட்ட பகுத்தறிவு ஆரம்ப அரசு உதவி பெறும்  பள்ளி உள்ளது.  பள்ளி வகுப்பறை கட்டிடம் சிதிலமடைந்த தால், புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாநிலங்களவை உறுப்பி னர் எம்.சண்முகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி  கான்கிரீட்டால் கட்டிடம் கட்டுவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, அதனடிப்படையில் அடிக்கல் நாட்டு விழா  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி க்கு கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழ கன், தலைமை வகித்து தொடங்கி வைத்தார். 


தஞ்சையில் தென்னிந்திய  மனநல மருத்துவ கருத்தரங்கு  

தஞ்சாவூர், மே 28-  தஞ்சை மனநல மருத்துவச் சங்கம், தஞ்சை மருத்துவக்  கல்லூரி மனநல மருத்துவத்துறை மற்றும் திருவாரூர் மருத்து வக் கல்லூரி மனநல மருத்துவத்துறை ஆகியவை இணைந்து,  “மகளிரும், மனநலமும்” என்ற தலைப்பில் தென் இந்திய மனநல மருத்துவ கருத்தரங்கை தஞ்சையில் சனிக்கிழமை தொடங்கின. இந்த கருத்தரங்கு ஞாயிறும் (மே 29) நடக்கிறது. கருத்தரங்கிற்கு தென்னிந்திய மனநல மருத்துவ சங்கத்  தலைவர் டாக்டர் ரமணன் எரத் தலைமை வகித்தார். அகில  இந்திய மனநல மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் என்.என்.  ராஜூ, தேசிய மனநல மற்றும் நரம்பியல் கழக மூத்த பேரா சிரியர் டாக்டர் பிரபா சந்திரா, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், திருவாரூர் மருத்து வக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், டாக்டர் ஜெ.வெங்கடே சன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசி னர். கருத்தரங்கில், மாறிவரும் நவீன உலகில் மகளிர் சந்திக்கும் மனநல பிரச்சனைகள், சவால்கள், மாதவிடாய் மற்றும்  குழந்தைப்பேறு காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மனரீதி யான பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது . இதில், சங்க ஹானேரி செயலாளர் டாக்டர் சுரேஷ் குமார், துணை செயலாளர் உதய்குமார் மற்றும் பலர் கலந்து  கொண்டனர். ஏற்பாடுகளை தஞ்சை மூத்த மனநல மருத்துவர்  மற்றும் ஓய்வு பெற்ற பேராசிரியர் டாக்டர் வெங்கடேசன், மனநல டாக்டர் பாபுபாலசிங், டாக்டர் ராதாகிருஷ்ணன், டாக்டர்  இக்பால் ஷெரீப் ஆகியோர் செய்திருந்தனர்.


போக்சோ சட்டத்தில் இளைஞர்கள் கைது

அரியலூர், மே 28- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இடங் கன்னி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (21). இவர் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வ தாக ஆசை வார்த்தை கூறி வெளியூர் அழைத்து சென்றார்.  இதுகுறித்து அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில்  ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுமதி நடத்திய விசாரணையில், இவர்கள்  திருப்பூரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,  அங்கு சென்று அவர்களை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த னர். அப்போது, சிறுமியிடம் செல்வகுமார் ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து செல்வக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது  செய்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள  மதுக்கூர் அண்டமி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற  ரெங்கதுரை (40) எலெக்ட்ரிசியன் வேலை செய்து வருகிறார்.  இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், இவர் 8 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத் துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற் றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர்  அளித்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை அனைத்து மகளிர்  காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு  செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.