districts

திருச்சி விரைவு செய்திகள்

புதிய சாலை அமைக்கப்படுமா?

பொன்னமராவதி, ஜன.7- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி அருகே கண்டியா நத்தம் கிராமத்திலிருந்து ஆலவயல் வரை கடந்த  2020 ஆம் ஆண்டு சாலை போடப்பட்டது. ஆனால்,  ஒரு மாதத்திற்குள் சாலை  குண்டும் குழியுமாக மாறியது. இதேதான் கண் டியாநத்தம் உலகம்பட்டி செல்லும் சாலையின் நிலையும்.  இச்சாலை வழியாக பேருந்துகள், பள்ளி வாக னங்கள் என நூற்றுக் கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், தற்போது குண்டும் குழி களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிர மப்படுகின்றனர். எனவே,  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலையை புதிதாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.


ஆசிரியர்களுக்கு கூட்டம்

பொன்னமராவதி, ஜன.7- புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதியில் வட்டார வளமயத்திற்குட் பட்ட அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி களின் தலைமை ஆசிரி யர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில்  பள்ளிகளுக்கு வழங்கப் படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மானியத் தொகை செலவினங்கள் மேற்கொள்ளுதல், கனரா வங்கி இணையத்தில் எஸ்என்ஏ அக்கவுண்ட் மூலம் தொகை விடுவித்தல்  பற்றி விளக்கப்பட்டது.


குட்கா வைத்திருந்தவர்  அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவு

மதுரை, ஜன.7-  மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவர்  ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 700 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட  புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.  இவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற  மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வெள்ளியன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நடைபெற்றது.  நீதிபதி, மனுதாரரின் சிறைகாலத்தை கருத்தில்  கொண்டு, இந்த நீதிமன்றம் மனுதாரருக்கு நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்க முனைகிறது. மனுதாரர் ரூ.50 ஆயி ரத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சுகாதார  பணிக்கு நன்கொடையாக வழங்க வேண்டும்.மேலும்  நன்கொடை செலுத்தியதற்கான ரசீதை ரூ. 10 ஆயிரத்திற்கான  பத்திரத்துடன் சேர்த்து விசாரணை நீதிமன்றத்தில் ஒப்படைக்க  வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார்.


போலி பணி நியமன  ஆணை கொடுத்து மோசடி ஊர்க்காவல் படை வீரர் கைது  

திண்டுக்கல்,ஜன.7- வேலை வாங்கித் தருவதாக போலி நியமன ஆணை கொடுத்து ரூ.17 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது  செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மல்லனம்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(36). இவர் சென்னை மாநகராட்சி யில் வேலை வாங்கி தருவதாக கூறி சங்கப்பன், சகாயராஜ்,  ஆண்டவர், கவிரத்னா ஆகிய 4 பேரிடம் ரூ.17 லட்சம்  பெற்றுக் கொண்டு போலி நியமன ஆணை கொடுத்ததாக மாவட்ட எஸ்பி.பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் வினோதா, சார்பு ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவலர்கள் வழக்கு பதிந்து போலி நியமன  ஆணை கொடுத்த விஜயகுமாரை கைது செய்தனர்.