districts

அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை, அக்.21 - மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி தலை மையாசிரியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.  காழியப்பநல்லூர் டான்போஸ்கோ தொழில்நுட்பக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற விழா வில் ஊராட்சி தலைவர் ஜெயமாலதி சிவராஜ் மரம் நடும்  விழாவை துவக்கி வைத்தார். டான்போஸ்கோ கல்லூரியின் செயலாளர் அந்தோணி டேனியல் செபாஸ்டின், முதல்வர் வெண்ணிலா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெய பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் 100  மரக்கன்றுகள் நடப்பட்டன.

;