கோரிக்கைகளை நிறைவேற்றிய அலுவலர்கள்
சேதுபாவாசத்திரம், ஏப்.21-
மரக்காவலசை குடிசை வாழ் மக்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட அப்பகுதி மக்களின் வாழ்வாதாரக் கோரிக் கைகளை வலியுறுத்தி சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு உண் ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேது பாவாசத்திரம் ஒன்றியம் மரக்காவலசை, கழுமங்குடா, காரங்குடா கிளைகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், வழக்கறிஞர் வீ.கருப்பையா, பி.சேகர், பி. பெரியண்ணன், அகிலன், கர்த்தர், சீனிவா சன், இளங்கோவன், செந்தில்குமார், நவ நீதம், ஜாக்குலின் மேரி, ஜகுபர்அலி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடற்கரை முகத்து வாரங்களை தூர்வாரி படகுகள் நிற்பதற்கு வசதி செய்து தர வேண்டும். கழுமங்கடா கரு வாடு உலர்த்தும் தளத்தினை கருவாடு உலர்த்துவதற்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். தனிநபர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அரசுக்கு சொந்தமான மீன் உலர்த்தும் களம் என பெயர் வைக்க வேண்டும். மின் வசதி இல்லாத மரக்காவலசை குடிசை வாழ் மக்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். குடிமனைப் பட்டா வழங்கப்பட்ட வர்களுக்கு இடத்தை அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டும். காரங்குடா கூட்டுறவு சங்கத்தில் பெண் மீனவர்களுக்கு கடன் வழங்கவும், பெண்களுக்கு பொது கழிப் பறை அமைத்து தரவேண்டும் என வலியுறுத் தப்பட்டது.
பேச்சுவார்த்தை வெற்றி
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன், குருவிக்கரம்பை சரக வருவாய் ஆய்வாளர் வெற்றிச்செல்வி, கிராம நிர்வாக அலுவ லர்கள் மகாலட்சுமி, செந்தில்குமார் காவல் உதவி ஆய்வாளர் வாகீசுவரன், தனிப்பிரிவு காவலர் பாலமுருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் நிரஞ்சனா சரவணன் ஆகியோர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் தலைமையிலான சிபிஎம் நிர்வா கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், உடனடியாக மின் இணைப்பு பெற ஏதுவாக மரக்காவலசையைச் சார்ந்த நான்கு பேருக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்பட்டது. மற்ற கோரிக்கைகள் குறித்து விரைவில் வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடத்தி முடிவு செய்யலாம் என அலுவலர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப் பட்டது. இதையடுத்து உண்ணாவிரதப் போ ராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.