திருச்சிராப்பள்ளி, ஜன.9 - ஊதிய ஒப்பந்த பேச்சுவாத்த் தையை துவக்கக் கோரி அரசு போக்கு வரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்க ளில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டன. வரவுக்கும் செலவுக்குமான வித்தி யாச தொகையை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்த பலன், அக விலைப்படி உயர்வை வழங்க வேண்டும். 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இறந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 15 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றன. இதில் திமுக தொழிற்சங்கம் தவிர, மற்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலைநிறுத்த ஆதரவு போராட்டம்
வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து அரசு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஓய்வு பெற்றோர் நலஅமைப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செவ்வாயன்று ஆதரவு போராட்டங்கள் நடைபெற்றன. திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதி யில் உள்ள அரசு விரைவு போக்கு வரத்து கழக பணிமனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் மாநி லத் தலைவர் அருள்தாஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், சம்மேளனக் குழு உறுப் பினர் முத்துவேல், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராமன் ஆகியோர் பேசினர்.
புதுக்கோட்டை
அரசுப் போக்குவரத்து ஊழியர்க ளின் வேலை நிறுத்தப் போராட்டத் தால் புதுக்கோட்டை மாவட்டத்தில் குறைவான பேருந்துகளே இயக்கப் பட்டன. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் புதுக்கோட்டை பணி மனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில், போக்கு வரத்துக் கழக நிர்வாகம், ஓய்வுபெற்ற ஊழியர்களையும், பேருந்துகளை ஓட்டி அனுபவம் இல்லாத கார், வேன், ஆட்டோ ஓட்டுநர்களைக் கொண்டும் சில வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கியது குறிப்பிடத்தக்கது. பொன்னமராவதி பேருந்து நிலை யம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு நிர்வாகிகள் பாலமுரு கன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
அரியலூர்-பெரம்பலூர்
தொழிற்சங்கங்கள் சார்பாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் முன்பும், போக்கு வரத்து பணிமனை கிளை முன்பும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு திருச்சி மண்டல துணைத் தலை வர் நீலமேகம் தலைமை வகித்தார். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு போக்குவரத்து மாவட்ட துணைச் செயலாளர் சிங்கராயர் தலைமை வகித்தார். கும்பகோணம் கும்பகோணம் அரசு போக்கு வரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில், போக்கு வரத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதி யர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.
திருவாரூர்
திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய போக்குவரத்து கிளை மையங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மன்னார்குடி பணிமனை முன்பு தொழிற்சங்கங்களில் கூட்ட மைப்பு சார்பில் செ.மதிவாணன் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலா ளர்கள் நாகை புதிய பேருந்து நிலை யத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு, அரசு போக்குவரத்து கழக பணி மனையை சென்றடைந்து ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். 60 சதவீத அரசு பேருந்து கள் இயக்கப்படவில்லை. நாகப்பட்டி னம் மற்றும் வேதாரண்யம் அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணி களில் ஈடுபட்டனர்.