தஞ்சாவூர், ஆக.11- தஞ்சாவூர் மாவட்டத்தில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில் சங்கங்கள் இல்லாத 400 வருவாய் கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களைக் கொண்டு ஆவின் பால் சங்கம் அமைக்க பயிற்சிக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை யில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவிக்கையில், “கூட்டுறவு சங்கத்தின் முக்கியத்துவம், ஆவின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தரமான பாலுக்கு நியாயமான விலை, மானிய விலையில் கால்நடை தீவ னம், சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை, கால்நடை காப்பீடு மற்றும் பால் உற்பத்தியா ளர்களுக்கான இன்சூரன்ஸ் போன்றவை ஆவின் மூலம் கிடைக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 400 சுய உதவிக் குழு வினர், கலந்து கொண்டு ஆவின் கூட்டுறவு சங்கம் அமைக்க பயிற்சியினை பெற்றனர்” என்றார். விழாவில், ஆவின் பொது மேலாளர் சரவணகுமார், மகளிர் திட்டம் திட்ட இயக்கு நர் எஸ்.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெய சீலன், உதவி பொது மேலாளர் (பால் உற்பத்தி) டாக்டர் வடிவேல், டாக்டர் மாதவ குமரன், பால்வளத்துறை சார் பதிவாளர் முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.