தஞ்சாவூர், ஆக.11 -
தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி பேரூராட்சி அலுவல கத்தில், நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி வியாழனன்று நடைபெற்றது.
பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், பெருமகளூர் பேரூ ராட்சி பெருந்தலைவர் சுந்தரத் தமிழ் ஜெயபிரகாஷ், பேரா வூரணி பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் ஆகி யோர் தலைமை வகித்தனர்.
இதில், “இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் அடிப்படை யில், பள்ளி மேலாண்மை குழு வாயிலாக பள்ளி மேம்பாட்டு திட்டம் வரைதல் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் பொறுப்பும் கடமையும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டது. கருத் தாளர்களாக ஆசிரியர் பயிற்று நர் ஏ.ஆர்.சரவணன், சமுதாய ஒருங்கிணைப்பாளர் பிரவீனா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.