விவசாயிகளுக்கு பயிற்சி
தஞ்சாவூர், டிச.24 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம், புனல்வாசல் கிராமத்தில் விவசாயிகளுக்கான பயிற்சி சாக்கோட்டை உழவர் பயிற்சி நிலையம் வேளாண்மை துணை இயக்குநர் எஸ்.அய்யம் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் சாக் கோட்டை உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் கண்ணன் வர வேற்றார். பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ராணி பேசுகையில், “நெற் பயி ரில் மகசூல் அதிகரிப்ப தற்கான முக்கிய தொழில் நுட்பங்கள் பற்றி எடுத்துக் கூறினார். குறிப்பாக விதைத் தேர்வு, விதை நேர்த்தி, நீர் மேலாண்மை, மண் பரிசோதனையின் மூலம் உர மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பருவத்தில் பயிர் செய்தல் தொழில் நுட்பங்கள்” பற்றி விரி வாக கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் முத்துவேல் தோட்டக் கலை சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி கூறி னார்.
மக்கள் திட்ட முகாம்
பெரம்பலூர், டிச.24- பெரம்பலூர் மாவட் டம் வேப்பூர் ஒன்றியம், துங்கபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 287 பயனாளிகளுக்கு ரூ.2.49 கோடியில் பல் வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
டிச.27 திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி, டிச.24 - திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிச.27 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற வுள்ளது. இம்முகாமில் பல்வேறு தனியார் துறை களைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந் தெடுக்க உள்ளனர்.
மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறு வனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகா மில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்ட தாரிகள் பட்டதாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் கலந்து கொள்ள லாம்.
மாவட்டத்திலுள்ள திறன் பயிற்சி நிறு வனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகா மில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்ட தாரிகள் பட்டதாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளி கள் கலந்து கொள்ள லாம்.
மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்கள்: தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு
கும்பகோணம், டிச.24 - கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், கும்ப கோணம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சாகுபடி நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. குறிப்பாக நகரின் தாழ்வான பகுதியான எள்ளு குட்டை, இ.பி. காலனி, ஆலையடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
கடந்த 10 நாட்களுக்கு மேலாகி யும் வெள்ள நீர் வடியாததால் பயிர்கள் நீரில் மூழ்கி அழுகத் தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதிகளை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கும்பகோணம் எள்ளுகுட்டை பகுதியில் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை தோட்டக்கலை துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவிக்கை யில், “விவசாய நிலங்களில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளி யேற்றவும், பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தரவும் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
திருச்சிற்றம்பலம் அருகே நெடுஞ்சாலையில் இருந்த பனைமரங்கள் வெட்டிச் சாய்ப்பு
தஞ்சாவூர், டிச.24 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், செருவா விடுதி தெற்கு ஊராட்சியில், பட்டுக்கோட்டை - அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு, வளர்த்து வந்த பனை மரங்களை அனுமதியின்றி வெட்டிச் சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பனைமரம் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டுக்கோட்டை - அறந்தாங்கி நெடுஞ்சாலையில் செரு வாவிடுதி தெற்கு ஊராட்சியில் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கும், போத்தியம்பாள் ஆர்ச்சுக்கும் இடையில், தமிழ்நாடு அரசால் பாதுகாக்கப்பட்டு வளர்த்து வந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட பனை மரங்களை எவ்வித அனுமதியுமின்றி சுயலாபத்திற்காக சிலர், இயந்திரம் மூலம் இரவோடு இரவாக வெட்டி வேரோடு சாய்த்துள்ளனர்.
அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பனைமரங்களை சுய லாபத்திற்காக வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்ப தோடு, மீதம் இருக்கும் பனை மரங்களையாவது பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெண்மணி தியாகிகள் நினைவு தின பேரவை
அரியலூர், டிச.24 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில், வெண்மணி தியாகிகள் நினைவு தின சிறப்பு பேரவை செவ்வா யன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித் தார்.
மாநில பொருளாளர் அ.பழநிசாமி வெண்மணி தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஏ.கந்தசாமி, மாதர் சங்க மாவட்டச் செய லாளர் அம்பிகா, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மீனா ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட னர்.
தொடர்ந்து நடைபெற்ற பேரவையில், உழவன் உரிமை ஆண்டு சந்தா 100-க்கான தொகை ரூ.13,500/- மாநில பொருளாளர் பழநி சாமியிடம் வழங்கப்பட்டது.
மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!