திருச்சிராப்பள்ளி, செப்.12 - தொழிற்சங்க பாகுபாடு பார்த்து செயல்படுவதை போக்குவரத்து நிர்வாகம் கைவிட வேண்டுமென வலி யுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க (சிஐடியு) 38- வது ஆண்டு பேரவை செவ்வாயன்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். சிஐ டியு கொடியை துணை பொதுச் செய லாளர் முருகன் ஏற்றினார். அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு பொதுச் செயலாளர் கனகராஜ் துவக்க வுரையாற்றினார். வேலையறிக் கையை பொதுச் செயலாளர் கருணா நிதி வாசித்தார். வரவு-செலவு அறிக் கையை பொருளாளர் சிங்கராயர் சமர்ப்பித்தார். சிஐடியு முன்னாள் மாவட்ட செயலாளர் சம்பத் சிறப்புரை யாற்றினார். சம்மேளன துணை பொதுச் செயலாளர் கனகசுந்தர் நிறைவுரை யாற்றினார். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை உடனே துவங்க வேண்டும். நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பேட்டா இழப்பு, தொழில் நுட்ப ஊழியர்களுக்கு ஏற்படும் இன்சென்டிவ் இழப்பை சரிசெய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய 90 மாத டி.ஏ வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல் படுத்த வேண்டும். மிகை பணிக்கு 12(3) ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வை நெருங்கும் தொழிலாளர்களுக்கு இலகுப்பணி வழங்க வேண்டும். திருச்சி, கரூர் மண்டல நிர்வாகத்தில் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க பாகுபாடு பார்த்து நிர்வாகம் செயல்படுவதை கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மத்திய சங்க துணைத் தலைவர் நீலமேகம் வரவேற்றார். துணை பொதுச் செயலாளர் மாணிக்கம் நன்றி கூறினார்.