திருவாரூர், நவ.29 - பாலஸ்தீன மக்கள் மீது போர் தொடுத்திருக்கும் இஸ்ரேல் அதிபரை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் மாவட்டக் குழு சார்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்டத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சந்திரசேகர் ஆசாத் மற்றும் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என்.அனிபா, மாவட்டப் பொருளாளர் இரா.மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.