அறந்தாங்கி, செப்.30 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் 2024 - 2027 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகி கள் பதவியேற்பு விழா மற்றும் முதல் பொதுக் குழு கூட்டம் தாலிப் மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் ரெ. தங்கதுரை தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகளுக்கு அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் பணி ஏற்பு நிகழ்ச்சியை நடத்தினார். புதிய தலைவராக ஆடிட் டர் ரெ.தங்கதுரை, செயலாளராக க. சுரேஷ்குமார், பொருளாளராக ஏ.முகமதுஹாரிஸ் ஆகியோர் பொறுப் பேற்றுக் கொண்டனர். சிறப்பு விருந்தி னராக மதுரை நடராஜ் ஆயில் மில் இயக்குநர் டாக்டர் என்.செந்தில்நாதன் கலந்து கொண்டு, வணிகர் நலன் சார்ந்த கருத்துகளை கூறி வாழ்த்திப் பேசினார். மூன்று நலிந்த வணிகர்களின் மகன், மகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. நலிந்த வணிகப் பெண்மணிக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. இரண்டு சாலையோர வணிகர்களுக்கு நிழல் குடை வழங்கப்பட்டது. நலிவுற்ற வணிக பெண்களின் திருமண உதவித்தொகை ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். அனைத்து வணிகர்களுக்கும் உயிர் காக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் அமல் படுத்தப்படும். நலிவுற்ற வணிகர்கள் இறப்பு எய்தும் பட்சத்தில் ஈமச் சடங்கிற்கு, அவரது குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். நகரில் மக்கள்தொகை அதிகரித்தி ருப்பதால், நகர காவல் நிலையம் - புறக்காவல் நிலையம் என தனித்தனி யாக அமைக்க அரசு முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.