districts

img

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பொங்கல் விடுமுறையில் உற்சாகம்

நாகர்கோவில், ஜன.16- பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு உற்சாகத்துடள் சுற்றுலா பய ணிகள் குவிந்தனர். கடந்த மூன்ற நாட்களாக  அதிகாலை  முதலே கன்னியாகுமரி, பத்ம நாபபுரம் கோட்டை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், முட்டம், லெமூர், குளச்சல் கடற்கரைகள் என சுற்றுலா பய ணிகளின் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கன்னியாகுமரியில், தற்போது முக்கிய மான மூன்றாம் கட்ட சீசன் நிலவி வருகிறது. இந்த சீசனில் அதிக அளவில் சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் வருகை தரு வது வழக்கம். அதுமட்டுமல்லாது இந்தியா வின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல்லா யிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்து செல்வர். இந்த நிலையில் பொங்கல் விடுமுறையை ஒட்டி  செவ்வாயன்று அதிகாலை முதலே ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.  சூரிய உதயத்தைக் காண ஏராளமா னோர் அதிகாலையில் சன் வியூ பாய்ன்டில்  குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்க ளில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள் முக்கடல் சங்க மிக்கும் பகுதி, காந்தி மண்டபம், காம ராஜர் மண்டபம்,  போன்றவற்றை பார்த்து  ரசித்தனர்.  சுற்றுலாப் பயணிகள் படகு மூல மாக விவேகானந்தர் நினைவு பாறையைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர். கூடுதல் நேரம் படகு இயக்கம் வழக்கமாக காலை 8 மணி முதல்  மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து நடைபெறும். ஆனால் பொங்கல் விடு முறையை ஒட்டி ஜன.15, 16, 17 ஆகிய மூன்று நாட்களும் காலை 2 மணி நேரமும்  மாலை 2 மணி நேரமும் படகு போக்கு வரத்து நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி செவ்வாயன்று காலை  6 மணி முதல் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று விவே கானந்தர் நினைவு பாறைக்குப் படகு மூலம் சென்று பார்வையிட்டு வந்தனர். அதே போல மாலையும் வழக்கமாக மாலை 4 மணிக்கு முடியும் படகு போக்குவரத்து 6 மணி  வரை நடைபெற்றது. கடந்த 4 நாட்களில் 40  ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணி கள் விவேகானந்தர் பாறைக்கு படகு மூலம்  சென்றுள்ளனர். மேலும் கடலில் புனித நீராடிய சுற்று லாப் பயணிகள் கன்னியாகுமரியில் அமைந் துள்ள பகவதி அம்மனை தரிசனம் செய்த னர். தொடர் விடுமுறையை ஒட்டி சுற்றுலாப்  பயணிகளின் வருகையால் கன்னியாகுமரி களைகட்டியது.