மயிலாடுதுறை, டிச.14 - புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தரங்கம்பாடியில் சுற்றித் திரியும் நூற்றுக் கணக்கான மாடுகளால் சுற்றுலா விரும்பிகள் அவதியடைந்து வருகின்ற னர். மிக முக்கிய கடற்கரை நகரங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடிக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து, ஒவ்வொரு நாளும் சுற்றுலா விரும்பிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். தரங்கம்பாடி பகுதியில் ஓசோன் வாயு கலந்த காற்று அதிகளவில் வீசுவதால் சுற்றுலாப் பய ணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தரங்கம்பாடியின் அடையாளங் களில் ஒன்றான டேனிஷ் கோட்டையின் எதிர்ப்புறம் சிறுவர்கள் விளையாடக் கூடிய பெரிய அளவிலான மணல் நிரப்பிய மைதானம் உள்ளது. இங்கு சுற்றித் திரியும் மாடுகள் படுத்துக்கொள் வதால், குழந்தைகளுடன் வரும் சுற்று லாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடை கின்றனர். மேலும் மைதானம் மற்றும் மைதானத்தைச் சுற்றியுள்ள நடை பாதைகளில் மாடுகள் சாணம் போடுவ தால், சுற்றுலா விரும்பிகள் நடமாட முடி யாத சூழல் தொடர்ந்து நீடிக்கிறது. உடனடியாக தரங்கம்பாடி பேரூ ராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களும், சுற்றுலா விரும் பிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.