திருச்சிராப்பள்ளி, ஏப்.29-
திருச்சி மாவட்டத்தின் அனைத்து கிராம ஊராட்சி களிலும் மே 1 தொழிலாளர் தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடை பெறவுள்ளது.
கூட்டத்தில், ஊராட்சி களின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், அப்பகுதி களைச் சேர்ந்த பொது மக்கள் தவறாது இக்கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.