districts

img

பர்மா காலனி மக்களுக்கு கழிவறை, வடிகால் வசதி செய்து தருக!

வாலிபர் சங்கம் மனு திருச்சிராப்பள்ளி, டிச.11- திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி  தலைமையில் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர்  சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனு வில் கூறியிருந்ததாவது: திருச்சி மாநகராட்சி 40 ஆவது வார்டுக்குட் பட்ட பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெருவில் சுமார் 80 குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில், வீடுகளி லேயே கழிவறை அமைப்பதற்கு போது மான இடவசதி இல்லை. தற்போது திரு வெறும்பூர் ரயில்வே நிலையம் அருகே புதிய கட்டிடம் கட்டிய பிறகு, இயற்கை உபாதையை கழிக்க திறந்தவெளி பகுதிகள் இல்லை. இத னால் பெண்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். மேலும் பர்மா காலனி பகுதியின் கழிவு  நீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி  இல்லாததால், சாக்கடை நிரம்பி கழிவுநீர் வீடுகளுக்குள் புகும் சூழல் ஏற்படுகிறது. தெரு விளக்குகள் இல்லாததால், ரயில்வே  நிலையம் வந்து செல்லும் மக்கள் அச்சப்படும்  நிலை உள்ளது. எனவே கழிவறைகள், கழிவு நீர் வடிகால், தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிர்வாகம்  செய்து தர வேண்டுமென கேட்டுக் கொள் கிறோம். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.  மனுவை மாவட்ட வருவாய் அலுவலரி டம் கொடுத்த போது, பர்மா காலனி கிளைத்  தலைவர் பாண்டியன், கிளைச் செயலாளர் தினேஷ், கிளைப் பொருளாளர் கார்த்தி ஆகி யோர் உடனிருந்தனர்.