கும்பகோணம், ஜூலை 31-
கும்பகோணம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 45 வார்டுகளிலும் குடிநீர் தண்ணீர் விநியோகம் கொள்ளி டம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வருகிறது. இதில் சில இடங்களில் குழாய்கள் பழுதடைந்து நீர் கசிவு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாகி வருவதை சரி செய்வதற்காக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக அறி விக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கும்ப கோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு வரும் குடிநீர் பிரதானக் குழாய்களில் ஏற்பட்டுள்ள நீர் கசிவினை சரிசெய்யும் பணி நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 1, 2 ஆகிய தேதிகளில் கும்பகோணம் நகரில் குடிநீர் விநியோ கம் நிறுத்தப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்க ளுக்கு தேவையான குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.