districts

இயற்கைப் பேரிடர்களாக அறிவித்து நிவாரண நிதி வழங்குக!

திருச்சிரப்பள்ளி, ஜன. 2 - தமிழக மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், மழை வெள்ளப் பாதிப்பை, கடுமையான இயற்கை பேரிடர்களாக அறிவித்து, தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என  பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். இந்தக் கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்கிறார்களே என்று எண்ண வேண்டாம்; இது மாநில மக்களின் கோரிக்கைதானே தவிர, அரசியல் முழக்கங்கள் அல்ல என்றும் பிரதமர் முன்பாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

பட்டங்களை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி
திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் திறப்பு உட்பட ரூ. 19 ஆயிரத்து 850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாயன்று தமிழகம் வந்தார். தனி விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர் மோடி, 10.30 மணியளவில் ஆளுநர் தலைமையில் திருச்சி பாரதிதாசன்  பல்கலைக்கழக 38-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு, தங்கப் பதக்கம் பெற்ற 33 பேருக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து, 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பிலான புதிய முனையத்தை திறந்து வைத்து உரையாற்றினார். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றதுடன், பிரதமர் பங்கேற்ற இரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்,  புதிய விமான முனையத் திறப்பு விழாவில் பேசும்போது, தமிழ்நாட்டிற்குத் தேவையான பல்வேறு திட்டங்களை குறிப்பிட்டு, அவற்றுக்கு ஒன்றிய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உரிய நிதி ஒதுக்கீட்டை யும் வழங்க வேண்டும் என்று கோரினார். அவர்  பேசியது வருமாறு: 

அனைத்துத் துறையிலும் சிகரம் தொட்ட தமிழ்நாடு

“தொட்டத் துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலமான தமிழ்நாடு - இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வருகிறது.  அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கும் திருச்சிராப்பள்ளி யின் ‘பன்னாட்டு விமான நிலையத்தில், ஆயிரத்து 112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை’ இந்திய பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்திருக் கிறார்.  

தமிழ்நாடு முதலமைச்சர் என்கிற வகையில்,  தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அவருக்கு என்னு டைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதேபோல, இந்தத் துறையின் அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா-வுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

மக்கள் பயன்பாட்டிற்காக வேகமாக நடக்கும் விரிவாக்கம்
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையம். இதை மேலும் மேம்படுத்த தமிழ்நாடு அரசு 318 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில், 294.57 ஏக்கர் நில எடுப்பு செய்து இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், திருச்சி உட்பட சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை விரி வாக்கம் மற்றும் நவீனமயப்படுத்த 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய் செலவில், 2,302.44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.

மதுரையை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்
தென் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மக்கள் ஆன்மீகப் பயணமாக வருகிறார்கள். பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணி களும் வந்து செல்கிறார்கள். அவர்கள் எளி தாக வந்து செல்வதற்கு ஏதுவாக, மதுரை  விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே வைத்த கோரிக்கையை இந்தியப் பிரதமர் கனி வோடு பரிசீலிக்க வேண்டுகிறேன்.

மலேசியா மற்றும் ஜப்பான் நாடு களோடு - தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை கொண்டிருக் கிறது. அதைக் கருத்தில் கொண்டு, சென்னை  - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும் என்று நான்  கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். 

மெட்ரோ 2-ஆம் கட்ட திட்டத்திற்கு பங்களிப்பை வழங்க வேண்டும்
அதோடு, சென்னை மெட்ரோ ரயில்  திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணி களுக்குப் ‘பங்குப் பகிர்வு மாதிரி’ அடிப்படை யில் ஒன்றிய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்த வரை, தமிழ்நாட்டில் இப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சமீப காலமாக, இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

குறைந்துபோன ‘பெல்’ நிறுவனத்தின் ஆர்டர்கள்
அடுத்து, திருச்சி மாவட்டத்தின் சிறு, குறு, நடுத்தர (MSME) நிறுவனங்கள்தான் ‘பெல்‘ பொதுத்துறை நிறுவனத்துக்குத் தேவை யான உதிரி பாகங்களை வழங்கிக் கொண்டி ருந்தனர். தற்போது ‘பெல்’ நிறுவனத்திடம் இருந்து இவர்களுக்கு கேட்பாணை (Pro curement Order) மிகவும் குறைந்துவிட்டது. இதனால் இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் சிறு, குறு, நடுத்தர (MSME) நிறு வனங்கள் மிகவும் பாதிப்படைந்து இருக் கின்றன. எனவே, ‘பெல்’ (BHEL) நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பாணைகளை இவர்களுக்கு வழங்க ஆவன செய்யப்பட இந்திய பிரதமர் அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.

இயற்கைப் பேரிடர்களாக அறிவிக்க வேண்டும்
அதேபோல பிரதமர் அவர்கள் அறிந்த ஒன்றுதான்! கடந்த மாதம் சென்னை  மற்றும் தென் மாவட்டங்களில், கடுமை யான மழைப்பொழிவை தொடர்ந்து ஏற்பட்ட  வெள்ளம் காரணமாக, அந்த மாவட்டங் களில் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதமடைந்திருக்கின்றன. மக்களின் வாழ் வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டி ருக்கிறது. எனவே, அவற்றை ‘கடுமையான இயற்கைப் பேரிடர்கள்’ என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

நிவாரண நிதி கேட்பது அரசியல் முழக்கமல்ல!
தொடர்ந்து கோரிக்கையாக வைக்கி றோமே என்று எண்ண வேண்டாம்! பரந்து  விரிந்த இந்தியப் பெருநாட்டில் கோடிக் கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து, கல்வி - மருத்துவம் - அவசியத் தேவைகள் - உதவிகள் ஆகியவற்றை செய்து  தர வேண்டிய முக்கியக் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. மாநி லத்திற்காக கோரிக்கை வைப்பதும் - மாநில உரிமைகளை நிலைநாட்டுவதும் அங்கு வாழும் மக்களின் கோரிக்கைகள்தானே தவிர, அவை, ‘அரசியல் முழக்கங்கள்‘ அல்ல.

அந்த வகையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு மாண்புமிகு பிரதமர் அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றி தருவார்  என நான் நம்புகிறேன்”. இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக பட்டமளிப்பு விழாவிலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.  

அப்போது, “இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் அதில் தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்கள்தான் அதிகமாக இடம்பெற்றிருக்கும்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், “நூறாண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கல்விக்காக போடப்பட்ட விதைதான் இன்றைக்கு வளர்ந்து கல்வியில் சிறந்த மாநிலமாக நாம்  உயர்ந்து நிற்கிறோம்.

நமது திராவிட மாடல் அரசு அனைவருக்கும் கல்வி, அனை வருக்கும் கல்லூரி கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கோடு தான் சமூகநீதி புரட்சியே கல்வித் துறையில் நடத்தி வருகிறது. இன்னார்தான் படிக்க வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றி  அனைவருக்கும் அனைத்து விதமான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம். இன்றைக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம், உலக பல்கலைக்கழகங்களில் தரவரி சையில் பட்டியலும், தேசிய தரவரிசை பட்டி யலிலும் இடம்பெற்றுள்ளது. அப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள புரட்சி கவிஞர் பாரதி தாசன் சிலை, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறைகள், தமிழ் மையம் ஆகிய அனைத்தையும் தொடங்கியது நம்முடைய திராவிடமாடல் அரசுதான் என்பதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ஆளுநரைத் தடுமாற வைத்த ‘செக்குலர்’

பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குவதற்கு முன்பாக ஆளுநர் ஆர்.என். ரவி மாணவ - மாணவியர்க்கான உறுதி மொழியை வாசித்தார். அப்போது, யூனிட்டி (ஒற்றுமை), இண்டகிரிட்டி (நேர்மை) என்று வாசித்த ஆளுநர், அடுத்த வார்த்தையைக் கண்டு திடீரென்று தடுமாறினார். அந்த வார்த்தை செக்குலர் (மதச்சார்பின்மை). பின்னர் நிதானித்த ஆளுநர் மீண்டும் வாசிக்கத் துவங்கி  யூனிட்டி, இண்டகிரிட்டி, அண்ட் செக்குலர் என்று வாசித்தார். ‘செக்குலர்’ என்ற வார்த்தை இன்றைய ஆட்சியாளர்கள் சிலரை எந்தளவிற்கு அச்சுறுத்துகிறது என்பதற்கு ஆளுநரின் தடுமாற்றம் ஒரு உதாரணம்.

முதல்வர் பேச்சை இடைமறித்து  பாஜகவினர் வெறிக்கூச்சல்

விழாவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சை துவங்கியபோதும், ஒன்றிய  அரசு மற்றும் மோடியின் பெயரைக் குறிப்பிடும்போதும், விழாவில் பங்கேற்றி ருந்த பாஜக-வினர், மோடி.. மோடி.. எனவும், பாரத் மாத்தாவுக்கு ஜே.. என்றும் கூச்சல் எழுப்பினர். இதனால் பொறுமையிழந்த திமுக-வினரும், ஸ்டாலின்.. ஸ்டாலின்.. என முழக்கமிட்டு பதிலடி கொடுத்தனர். இதனால் சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.