தஞ்சாவூர், ஜூலை 31-
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுமக் கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆட்சியரி டம் மனு அளிக்கப்பட்டது.
சங்கத்தின் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றியக் குழு உறுப்பினர் கரிகாலன் மற்றும் அசோக் ராஜ் ஆகியோர் அளித்த மனுவில், ‘‘தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 450 மாணவ, மாணவி யர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு சுற்றுச் சுவர் இல்லாததால், இரவு நேரங்க ளில் மது அருந்துபவர்கள், கூட்டமாக உட் கார்ந்து குடித்து விட்டு பல்வேறு நெகிழித் தாள்களையும், காலிப் பாட்டில்களையும் போட்டு விட்டு அசுத்தமும் செய்து விடு கிறார்கள்.
இதை நேரில் கண்டவர்கள் தட்டிக்கேட் டால் அவர்களோடு மோதல் ஏற்படுகிறது. ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளிக்கு வரும்போது கூச்சப்படும் அளவிற்கு குப்பைகள் கட்டிக் கிடக்கிறது.
எனவே, இப்பள்ளிக்கு சுற்று சுவர் அமைத்து, பள்ளி மாணவர்களையும், ஆசி ரியர்களையும், மேலும் பள்ளியின் பாது காப்பையும் உறுதி செய்திட வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.