திருவாரூர், டிச.29 - தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள் ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, திருவா ரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சார்பாக நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், சமூகப் பணித்துறை தலை வர் (பொ) பேராசிரியர் சிவகாமி தலைமை யில், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் இணைந்து நிவாரணப் பொருட் களை சேகரித்தனர் என துணைவேந்தர் தெரிவித்தார். துணைவேந்தர் மு.கிருஷ்ணன் மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் இரா.திருமுரு கன் ஆகியோர் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனத்தை கொடிய சைத்து அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் சமூகப் பணித்துறை தலைவர் பேரா.சிவகாமி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.