districts

தீபாவளி போனஸ் வழங்கப்படுமா? திருபுவனம் நெசவாளர்கள் போராட்டம்

கும்பகோணம், நவ.6- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட நெச வாளர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். இவர்களுக்கு வருடந்தோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சங்க லாபத்தில் ஒரு பகுதியை தீபாவளி போனசாக பங்கிட்டு  கொடுப்பது வழக்கம். ஆனால் இம்முறை தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களே உள்ள  நிலையில் 2022-23 ஆண்டிற்கான தணிக் கையை நிறைவு செய்யாமலும், போனசை அறிவிக்காமலும் உள்ளனர். இந்நிலையில் திருபுவனம் கூட்டுறவு  சங்கத்தில் அங்கம் வகிக்கும் நெசவாளர் கள், சென்ற வருடம் கொடுத்த போனஸ் கொடுக்க வேண்டும். தீபாவளிக்கு சில  நாட்களே உள்ள நிலையில், நெசவாளர் களுக்கு பயன்படும் வகையில் உடனே போனசை வழங்க வேண்டும் என கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, தமாகா உள்ளிட்ட கைத்தறி நெசவா ளர்கள் அமற்றும் தன் கூட்டுக் குழுவினர் கலந்து கொண்டனர்.