‘‘என் வாழ்க்கை, என் சுத்தமான நகரம்’’ என்ற பிரச்சாரத்தின் கீழ், பழைய செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பாத்திரங்கள், உடைகள், படுக்கை விரிப்புகள், புத்தகங்கள் மற்றும் பொம்மைகளை சேகரிக்கும் இயக்கத்தை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தொடங்கியுள்ளது. சேகரிப்பை எளிதாக்கும் வகையில், நகரின் 34 இடங்களில் மைக்ரோ உரம் தயாரிக்கும் மையங்களுக்கு அருகில் (குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி) மையங்களைத் திறந்துள்ளது. பொதுமக்கள் பழைய பொருட்களை காலை ஏழு மணி முதல் மதியம் இரண்டு மணி வரை இந்த மையங்களில் வழங்கலாம்.