districts

img

திருச்சிராப்பள்ளி அம்மா மண்டபம் மேம்பாட்டிற்கு விரைவில் அனுமதி

திருச்சிராப்பள்ளி, ஆக.17-

      திருச்சிராப்பள்ளி அம்மா மண்டபத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு விரைவில் நிர்வாக அனுமதி கிடைக்குமென தக வல்கள் தெரிவிக்கின்றன.

    அம்மா மண்டபத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஆய்வுப்பணியை ஒரு நிறு வனம், கிட்டத்தட்ட முடித்துவிட்டது. ஒரு  மாதத்திற்குள் அதற்கு அனுமதி கிடைக் கும். அதைத் தொடர்ந்து டெண்டர் விடும் பணிகள் தொடங்கும் என நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

    குளிக்கும் இடத்தின் கட்ட வடிவ மைப்பும் உயரமும் கோவிலைப் போலவே  இருக்கும். “நடந்தாய் வாழி காவிரித்  திட்டத்தின் கீழ் உலக வள நிறுவனம்  (டபிள்யூஆர்ஐ) மூலம் செயல்படுத்தப் படும் திட்டங்களில் இதுவும் ஒன்று, இது காவிரியாற்றின் குறுக்கே மக்கள்தொகை அதிகம் உள்ள இடங்களில் ஆற்றின் போக்கு சிதைவடையாமல் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

   நீர்வளத்துறை வட்டாரங்களின கூற்றுப்படி விரிவான திட்ட அறிக்கை ஏற்க னவே தேசிய நதிநீர் பாதுகாப்பு இயக்கு நரகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

   பல்வேறு கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, திட்ட மதிப்பீடு ரூ.40 கோடியிலிருந்து ரூ.45  கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்தத் திட்டத்தின்படி, தற்போதுள்ள அம்மா மண்டபம் முதல் காவிரிக் கரை யில் உள்ள கீதாபுரம் வரை 600 மீட்டர்  நீளத்திற்கு முழுமையாக மாற்றியமைக் கப்படும். படித்துறை, பிரத்தியேகமான ‘திதி’ மண்டபம், நடைபாதை, சிகை யலங்கார வசதிகள், காவல் கண்காணிப்பு  கோபுரம், ஆண்கள் மற்றும் பெண்களுக் கான ஆடை மாற்றும் அறைகள், சுகாதார  வளாகம் மற்றும் வணிக வளாகம் ஆகி யவை கட்டப்பட உள்ளது.  

    திதி மண்டபம் திட்டத்தின் முக்கியப் பகு தியாக இருக்கும். இதில் சுமார் 750 நபர்கள்  தங்குமளவிற்கு இட வசதி இருக்கும். படித்துறை 150 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். ஆடிப்பெருக்கு மற்றும் அமா வாசை நாட்களில் உள்ளூர் மக்கள் மற்றும்  வெளியூர் மக்கள் குளிப்பதற்கும், சடங்கு கள் செய்வதற்கும் இது உதவும்.

     உள்ளூர் மக்கள் காலை மற்றும் மாலை யில் நடைபயிற்சி மேற்கொள்ளவும், ஆற்  றங்கரையின் அழகை ரசிக்கவும் உதவும் வகையில் 250 மீட்டர் தூரத்திற்கு நடை பாதையும் அமைக்கப்படுகிறது.