districts

வழிப்பறி செய்ய முயன்ற இளைஞர்களுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை

புதுக்கோட்டை, ஜூலை 20-

        புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்  குடியில் பெணியிடம் வழிப்பறி செய்த 3 இளைஞர்களுக்கு மூன்று  ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை  விதித்து நீதிமன்றம் தீர்ப்ளித்துள் ளது.

     புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கல்லாலங்குடியைச் சேர்ந்த சத்யாதேவி என்ற பெண்ணி டம் கடந்த 2022-ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர்  மூன்றரை சவரன் தாலிச் சங்கலியை பறித்து சென்றனர். பின்னர், மக்கள்  அவர்களை விரட்டிப் பிடித்து காவல்  துறையினரிடம் ஒப்படைத்தனர். இது  தொடர்பாக ஆலங்குடி காவல்துறை யினர் வழக்குப் பதிவுசெய்தனர்.  

    இந்த வழக்கில், பெண்ணிடம்  வழிப்பறி செய்த பட்டுக்கோட்டை யைச் சேர்ந்த மனோஜ் குமார்(22),  சிவகங்கை மாவட்டம் திருபுவ னத்தைச் சேர்ந்த அதியமான்(25), அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்20)  ஆகிய மூன்று இளைஞர்களுக்கும் மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்  டனையும் தலா ஆயிரம் ரூபாய் அப ராதமும் விதித்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜய பாரதி தீர்ப்பு வழங்கினார்.