districts

கூட்டுறவு வங்கி மேலாளர், மேலாண்மை இயக்குநர் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருவில்லிபுத்தூர், டிச.3-  விருதுநகர் மாவட்டம் சின்ன தாதாம்  பட்டியை சேர்ந்தவர் விஜயா. இவர் கடந்த  27.11.2018 அன்று இனம் காசிரெட்டியபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி யில் விவசாய கடனாக ரூ.1லட்சத்து 26 ஆயி ரம் வாங்கியிருந்தார். கடன் தொகை தவணை காலம் முடிந்தவுடன் 7 சதவீத வட்டி  யுடன் பணத்தைக் கட்ட வங்கி மேலாளர் கூறியுள்ளார்.  அரசு மானிய தொகை கழித்து கட்ட தயா ராக இருப்பதாக விஜயா தரப்பில் கூறப்பட்  டது. இந்நிலையில் உடனே பணத்தை செலுத்தி நகைகளை திருப்ப வேண்டும். நகைகளை ஏலம் விட்டு விடுவோம் என  விஜயாவை வங்கி மேலாளர் மிரட்டியுள் ளார். இதுகுறித்து விஜயா உயர் அதிகாரி களுக்கு புகார் தெரிவித்தார்.  இந்நிலையில் தமிழக அரசு விவசாய  கடன்களை ரத்து செய்து அரசு ஆணை வெளியிட்டது. ஆனால் விஜயாவின் நகை களை திருப்பித் தராமல் இழுத்தடித் துள்ளனர்.  இதனால், விஜயா தன்னை மிரட்டிய வங்கி மேலாளர், மேலாண்மை இயக்குநர்  நஷ்ட ஈடு தர வேண்டும், தனது நகைகளை  மீட்டு தர வேண்டும் என திருவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து, நீதிபதி சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர் விசா ரணை நடத்தி, தமிழக அரசின் அரசாணைப்  படி விஜயாவிற்கு விவசாய கடன் தள்ளு படி செய்யப்பட்டது. எனவே, அவரது  நகைகளை வங்கி மேலாளர், மேலாண்மை  இயக்குநர் ஒப்படைக்க வேண்டும்.  மேலும் விஜயாவை மிரட்டிய 2 பேரும்  ரூ.50 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செல விற்கு ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும்  என உத்தரவிட்டார்.