நாகப்பட்டினம், ஏப்.11 - உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவில் ரமலான் பண்டி கையையொட்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து புத்தாடை அணிந்து, ஆரத்த ழுவி, ரமலான் பண்டிகையை கொண் டாடினர். தமிழ்நாட்டின் மத நல்லிணக்க பூமியாக கருதப்படுகிறது நாகப்பட்டி னம் மாவட்டம். இம்மாவட்டத்தின் சிறப்புகளில் ஒன்றான உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று கூடும் நாகூர் தர்கா புகழ் பெற்றது. இஸ்லா மியர்கள் மட்டுமல்லாது அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்லும் இடமாக நாகூர் தர்கா விளங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 30 நாட்கள் நோன்பு நோற்ற இஸ்லா மியர்கள், புதனன்று பிறை தென் பட்டதை தொடர்ந்து ரம்ஜான் கொண்டாட்டத்தை தொடங்கினர். நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்கள் மற்றும் தர்காக்களில் இஸ்லாமியர்கள் ரம லான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட னர். அதன் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்காவில் நடை பெற்ற ரமலான் சிறப்பு தொழுகை யில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் கள் தொழுகையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து புத்தாடை அணிந்து வந்த இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி ரம லான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இப்பண்டிகையை யொட்டி நாகூர் தர்காவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து மும்மதத்தைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தந்தனர். இதேபோல நாகை மாவட்டத்தில் உள்ள 56 பள்ளிவாசல்களிலும், தர்காகளிலும் ரமலான் சிறப்பு தொ ழுகைகள் நடைபெற்றன. தமிழகம் முழுவதுமுள்ள தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு 7150 மெட்ரிக் டன் நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை
ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் புதன்கிழமை நூற்றுக்கணக்கானோர் சிறப்புத் தொழுகை நடத்தினர். புதுக்கோட்டை நகரில் பேருந்து நிலையம் பின்புறமுள்ள ஈக்தா திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான இஸ்லாமி யர்கள் புத்தாடை அணிந்து இத்தொ ழுகையில் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி தங்களின் பெருநாள் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஈகைத் திருநாள் எனக் கருதப்படுவதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உணவு வழங்கியும் விழாவைக் கொண்டா டினர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் (ரமலான்) ஈதுல் பெருநாள் சிறப்புத் தொழுகை 24 இடங்களில் புதன் கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை நகர கிளை 1, 2, முக்கண்ணாமலைப்பட்டி, அன்ன வாசல், ஆலங்குடி, கறம்பக்குடி, கீர மங்கலம், அறந்தாங்கி, வெட்டிவயல், ரெத்தினக்கோட்டை, ராஜேந்திர புரம், கோட்டைபட்டினம், வடக்கு அம்மாபட்டினம் 1,2, ஜெகதாப்பட்டி னம், கோபாலப்பட்டினம், ஆர்.புதுப்பட்டினம், முத்துக்குடா, கிருஷ் ணாஜிபட்டினம், மேற்பனைக்காடு, காசிம்புதுப்பேட்டை ஆகிய கிளை கள் சார்பில் 24 இடங்களில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை தவ்ஹீத் திடல்களில் நடைபெற்றன. மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி, ஆயப்பாடி, பொறையார், சங்க ரன்பந்தல், வடகரை, ஆக்கூர், திருச் சம்பள்ளி, கிளியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆயப்பாடி ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் முத்தவல்லி பஷீர் அகமது, செயலாளர் நூருல்லாஹ், பொருளாளர் ஹலில் ரகுமான், இமாம் கமாலுதீன், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் அப்துல்மாலிக் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்று, நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.