புதுக்கோட்டை, ஆக.8 -
வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ முன்னிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா நிதியுதவி வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் வட்டம், பூங்குடி கிராமத்தில் இயங்கி வந்த வெடிமருந்து தொழிற்சாலையில் 30.7.2023 அன்று விபத்து ஏற்பட்டது. இதில் கோவில் பட்டியைச் சேர்ந்த வீரமுத்து (31), திருமலை (30), வெள்ளனூரைச் சேர்ந்த சுரேஷ் (35) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த னர். மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைரமணி, குமார் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தி னர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவா ரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான காசோலையையும், விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கி மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா ஆறுதல் தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக் கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொ) ராஜ்மோகன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, வட்டாட்சி யர்கள் சக்திவேல், விஜயலட்சுமி, அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.