கரூர், ஏப்.30-
ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியவர்களை கைது செய்ய சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம், தென்னிலை பேருந்து நிறுத்தம் அருகே ஆட்டோ தொழிலாளர்கள் (சிஐடியு )சங்கம் உள்ளது இங்கு தென்னிலை அருகே உள்ள புளியம்பட்டியை சேர்ந்த ஓட்டுனர் பாலமுருகன் உறுப்பினராக உள் ளார். கடந்த ஏப்.29-ஆம் தேதி பாலமுரு கனுக்கும் ஆட்டோ ஓட்டுநர் மயில்வாகனம் அவரது மகன் கௌதம் (17) ஆகியோ ருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் இரு வரும் பாலமுருகனை கடுமையாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். படுகாய மடைந்த பாலமுருகன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தென்னிலை சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் என்.ரெங்க ராஜன். கிளைத் தலைவர் பி.வேலுச்சாமி, பொருளாளர் பாசருதீன், செந்தில்குமார், முருகேஷ் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ஆட்டோ சங்க தென்னிலை கிளை செய லாளர் பாலமுருகனை தாக்கிய கௌதம், மயில்வாகனம் ஆகிய இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் களை தென்னிலை காவல்துறை கைது செய்ய வேண்டும் நிலைய அதிகாரிகள் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் என்.ரெங்கராஜன் வலி யுறுத்தியுள்ளார்.