கும்பகோணம், ஜூன் 14-
மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கட்சியின் தஞ்சை மாவட்டம் திரு விடைமருதூர் தெற்கு ஒன் றிய உறுப்பினர் ரசீது வழங் கும் சிறப்பு பேரவை நாச்சி யார்கோவிலில் நடைபெற் றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.பழனி வேல் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் திருச்சி ஆர்.ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜெயபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாச்சி யார்கோவில் கிளைச் செய லாளர் பார்த்திபன் நன்றி கூறி னார்.
ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் எஸ்.தர்மையின், டி. லெனின் பாரதி, கே.ரங்க சாமி, ஆனந்தன், லதா, ஐயப் பன் உள்ளிட்ட கட்சி உறுப்பி னர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பேரவையில், திருவிடை மருதூர் ஒன்றியத்தில் உள்ள பலப்பகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக 70 பேர் புதிதாக இணைந்தனர். அவர்களை வரவேற்று கட்சி உறுப்பினர் ரசீது வழங்கி கௌரவிக்கப்பட்டது.