திருச்சிராப்பள்ளி, நவ,2 - திருச்சி கைலாஷ் நகர் விரிவாக்கப் பகுதியில் வீட்டு வாடகை தர தாமத மானக்கூறி கூலித் தொழிலாளியை கெட்ட வார்த்தையால் திட்டி விளக்கமாறால் அடித்து அவமானப்படுத்தியுள்ளனர். இதனால்அவமானம் தாங்க முடியாத கூலித் தொழிலாளி மனோகரன் கடந்த 14.10.2023 இரவோடு இரவாக தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமான வீட்டு உரிமையாளரும், அரசு பள்ளி தலைமை ஆசிரியருமான செல்லம்மாள்- தமிழரசன் ஆகியோர், இறந்துபோன கூலி தொழி லாளியின் கடைசி கடிதமான தடயத்தை யும் அழித்துள்ளனர். தொழிலாளி இறந்து 16 நாள் கூட ஆகாத நிலையில் வீட்டை காலி செய்ய சொல்லி மிரட்டியுள்ளனர். குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் திருவெறும்பூர் காவல் துறையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று கைலாஷ் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ரேணுகா, லெனின் ஆகியோர் பேசினர். தொழிலாளியின் தற்கொலைக்கு காரண மானவர்கள் மீது வழக்கு பதியவில்லை யொன்றால் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.