districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

திருவாரூர், அக்.8 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் வடக்கு ஒன்றியம் திருவிழிமிழலை கிரா மத்தைச் சேர்ந்த 40 குடும்ப உறுப்பி னர்கள் பல்வேறு கட்சியிலிருந்து விலகி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  நிகழ்ச்சிக்கு சிபிஎம் குடவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.ரவிச் சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றி யக் குழு உறுப்பினர் பி.செல்வராஜ் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று, புதிதாக அமைக்கப்பட்ட தோழர் டி.நல்லதம்பி நினைவுக் கொடி மரத்தில் செங்கொடி ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சேகர், தோழர் டி.நல்லதம்பி நினைவு  கல்வெட்டை திறந்து வைத்தார். புதிதாக  அமைக்கப்பட்ட கொடிமரத்தில், வாலிபர் சங்கத்தின் வெண்கொடியை ஒன்றியச் செயலாளர் ஆர்.மாரிமுத்து ஏற்றினார். ஒன்றியத் தலைவர் வி.தீன தயாளன் கல்வெட்டை திறந்து வைத் தார். நிகழ்ச்சியில் மாவட்டக் குழு, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.