districts

திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை விரைவில் மின்மயமாகும்

திருத்துறைப்பூண்டி, அக்.17 - திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதை விரைவில் மின் மயமாக்கப்பட உள்ளது. இதற்கான அதிவேக சோதனை ரயில் ஓட்டம் திங்களன்று நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டியில் மாயவரம் - அகஸ்தியம்பள்ளி அதிவேக ரயிலை 121 கி.மீட்டர் வேகத்தில் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த  அதிவேக சோதனை, வருங்காலங்க ளில் இந்த ரயில் தடத்தை மின்மயமாக்கு வதற்கான ஒரு முன்னோட்டம் ஆகும்.   திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையை 36 கி.மீ வரை மின்  மயமாக்குவதற்காக ஒன்றிய அரசு ரூ.47 கோடி ஒதுக்கியுள்ளது. இப்பணியை ஒரு  வருடத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதற்காக ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அதிவேக ரயில் அகஸ்தியம் பள்ளியிலிருந்து திருத்துறைப்பூண்டி வந்து,  எஞ்சின் மாற்றப்பட்டு, திருத்துறைப் பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை, அதி ராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி  வழியாக அதிவேக பரிசோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது. திருவாரூர் - காரைக்குடி 149  கி.மீ பாதை, ரூ.1500 கோடி செலவில் 2018 இல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு, ரயில் இயக்கப்பட்டது. இவற்றை ரயில்வே நிர்வாகம் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியாக ‘அதிவேக சோதனை ஓ.எம்.எஸ்’ என்ற கருவி மூலம் அளவீடு செய்து, அதை ரயில்வே கட்டுமான குழுவுக்கு பரிந் துரைக்கும். இப்பரிந்துரையின் அடிப்படை யில், எங்கெல்லாம் அதிர்வு அதிகமாக உள்ளது என கண்டறிந்து அத்தடம் சீரமைக்கப் படும்.  இதன்படி மின் மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் துரிதப்படுத்தும். அதன் முன் னோட்ட நடவடிக்கையாகவே இந்த அதிவேக சோதனை ரயில் இயக்கப்பட்டது.  சோதனை ஓட்டத்தின் போது. திருத்து றைப்பூண்டி ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். திருத்து றைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் மின் பாதை மாற்றுத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.